என்னமோ போங்கடா…

அடேய், ராஜராஜ சோழன் கடைசி காலத்தில் தஞ்சை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து செத்தானாம், எமக்கென்னமோ அவன் கருவூர் சித்தரின் ஞான திருஷ்டியில் இதை எல்லாம் பார்த்து தற்கொலை செய்ததாகவே தோன்றுகின்றது

அதென்ன ராவணன் குரூப்ஸ்? துரியோதனன் என்ன பாவம் செய்தான்? அவனை ஏன் சாதியினை விட்டு நீக்கினீர்கள்? கட்ட பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பினை சொல்லி கொடுத்ததே அவன் தானே

என்னமோ போங்கடா…

ஓ.. மூவேந்தரும் நீங்களா? இந்த கடையேழு வள்ளல் எல்லாம் நாடாரில் இல்லையா?

அதானே வள்ளல்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு, நமக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

தயவு செய்து அந்த கடையேழு வள்ளல்களை மட்டும் தொட்டுவிடாதீர்கள் நாடு தாங்காது..