என்னா கதை விடுகின்றார் ராஜ்கிரண்???

Image may contain: one or more people

மகாத்மா காந்தியின் ஆட்சியினை 10 வருடமாக ஈழத்தில் நடத்தினார் பிரபாகரன், அதனால் உலக நாடுகள் அழித்தன : ராஜ்கிரண்

நல்ல மனிதர் என நினைத்தால் உளறி கொட்டுகின்றார்

மிஸ்டர் ராஜ்கிரண், உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி, அந்த பொன்னான ஆட்சிக்கு ஏன் உலகெல்லாம் இருந்த ஈழதமிழர் திரும்பவில்லை

தமிழகத்தின் படுபயங்கரமான அகதிகள் முகாமில், ஆஸ்திரேலிய முகாமில் இருந்தெல்லாம் அகதிகள் ஏன் அந்த பொன்னான பூமிக்கு செல்லவில்லை?

எல்லா அகதிகளும் நாடு திரும்புங்கள் பொற்கால ஆட்சி நாங்கள் தருகின்றோம் என புலிகள் ஏன் அழைக்கவில்லை?

அந்த பொன்னான பூமியினை விட்டா அகதிகளாக ஓடினார்கள்?

சரி அந்த பொன்னான பூமியில் நீங்கள் என் குடியுரிமை வாங்கவில்லை?

நீங்கள் செல்லும்பொழுது வன்னிபகுதி மட்டுமே புலிகளிடம் இருந்தது, யாழ்பாண தமிழர்கள் ஏன் அந்த பொன்னான பூமியுடன் இணைய துடிக்கவில்லை?

ஏன் அய்யா இப்படி கதை விட்டு அழுகின்றீர்? இதோ சிங்கப்பூரில் , புருனேயில், துபாயில் பொற்கால ஆட்சி நடக்கின்றது உடனே உலக நாடுகள் எல்லாம் புகுந்து அழித்துவிட்டதா?

அங்கு மின்சாரம் கூட இல்லாமல், பள்ளிகள் இல்லாமல் சகலமும் துப்பாக்கி முனையில் என அம்மக்கள் பட்ட பாடு கொஞ்சமா?

கிட்டதட்ட 70 ஆண்டு ஈழத்தை பின்னோக்கி கொண்டு சென்றனர் புலிகள், அது இன்றைய உலகத்தோடு ஒட்ட இன்னும் 40 ஆண்டு ஆகலாம்,

என்ன இருக்கின்றது அங்கு? ஒரு கல்வி நிறுவணம்? ஒரு தொழிற்சாலை? ஒரு சுற்றுலா தளம்? ஒரு துறைமுகம்? ஏதாவது ஒன்று புலிகளின் இடத்தில் வளர்ந்ததா?

ஒரு வளர்ச்சியினை காட்ட முடியுமா?

ஏதோ நியூயார்க் அளவிற்கு புலிகள் ஈழத்தை வளர்த்தது போலவும், அதனை பின்லேடன் போல உலகநாடுகள் அழித்தது போலவும் அன்னார் பேசுகின்றார்

என்னா கதை விடுகின்றார் ராஜ்கிரண்???

ராஜ்கிரன் சினிமாவில் மட்டும் எலும்பு கடிப்பவர் அல்ல என்பது மட்டும் புரிகின்றது