என்னையும் பன்னீர்செல்வத்தையும் யாராலும் பிரிக்க முடியாது : பழனிச்சாமி
என்னையும் பன்னீர்செல்வத்தையும் யாராலும் பிரிக்க முடியாது : பழனிச்சாமி
பின்னே, இவர்கள் போக்கில் பிரிந்தால் சேர்த்து வைத்த மேலிடம் சும்மா விடுமா? உரித்து தொங்கவிடாதா?
உலகிலே மிரட்டி சேர்க்கபட்டிருக்கும் ஒரேநட்பு இதுதான், மிரட்டியே தொடரவைக்கபடும் நட்பும் இதுதான்

மிட்நைட் மசாலா பார்ப்பது உண்டா என துரைமுருகனிடம் கேட்டார் ஜெயகுமார், நீர் பார்ப்பதை எல்லாம் நான் பார்க்கமாட்டேன் என்றார் துரைமுருகன், சட்ட சபையில் ருசிகரம் : செய்தி
இது ருசிகரமாம், மண்ணாங்கட்டி
காவேரியில் நீர்வரவில்லை, என்னுடன் யார் காவேரியினை கெடுத்தது என்ற விவாதத்திற்கு அதிமுக வர தயாரா என சவால் விட்டவர் துரைமுருகன்
சட்டசபையில் உருப்படியாக விவாதிப்பார்கள் என பார்த்தால் மிட்நைட் மசாலா பற்றி வி.கே ராமசாமி ஸ்டைலில் விசாரித்திருக்கின்றார்கள்
இனி விரைவில் “சன்னி லியோன் படம் எப்படி?” என அமைச்சர் கேட்க, “நீர் பார்ப்பதை நான் பார்க்க மாட்டேன்ன், நான் எல்லாம் மியா கலிபா ரசிகன்” என துரைமுருகன் சொன்னாலும் சொல்லலாம்