என்னை கொல்ல தேடுகின்றார்கள் : காந்தியவாதியான “ராக்கெட் ராஜா”
என்னை கொல்ல தேடுகின்றார்கள் என செய்திகளை பரப்பிய தேசத்தின் கடைசி காந்தியவாதியான “ராக்கெட் ராஜா” என்பவர் பற்றி அதன் பின் தகவல் இல்லை
அந்த தியாகியின் கோரிக்கையினை சில நாடார் சங்கம் மட்டும் ஏற்றுகொண்டு பதிலளித்தது , மற்ற சங்கங்கள் சத்தமே இல்லை
தமிழகத்தில் மூலைக்கொரு நாடார் சங்கம் உண்டென்பது குறிப்பிடதக்கது..
சிலர் அவருக்காக போராட்டம் நடத்துவார்களாம், அந்த ராக்கெட் ராஜா எனும் மாபெரும் விஞ்ஞானியினை சுட்டால் எப்படி? அந்த ஐன்டீன் போன்ற விஞ்ஞானியினை அவமதித்தால் எப்படி, சுட்டால் உலகிற்கு எவ்வளவு அநீதி என சில குரல்கள்…
அதன் பின் என்னாயிற்று என தெரியவில்லை, சுதந்திர போராட்ட தியாகி, ஜெனரல் மானெக்ஷாவிற்கு பின் தேசம் காத்த அந்த மாவீரனை அதன் பின் காணவில்லை
அந்த அஹிம்சாவாதி , புத்தனின் குலவிளக்கு எங்கிருக்கின்றார் என்பது அடுத்த வாட்சப் வீடியோவில்தான் தெரியும்…