என்ன கேள்வி?

“அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் அறிவு கெட்டவனே” : கலைஞர் எழுதிய வசனம் இது

இன்றளவும் திமுக உபிக்கள் சிலாகிக்கும் வசனம் அது

ஆனால் அம்பாள் பங்காரு அடிகளாரிடம் பேசியிருக்கின்றார், பங்காரு அடிகளின் வாழ்வே அம்பாள் பேசியதுதான்

அவரிடம் தங்கள் புகழ்பெற்ற வசனத்தை சொல்லமுடியாமல் பல்லிளித்து வாழ்த்திவிட்டு வந்திருக்கின்றார் ஸ்டாலின்

திமுகவின் இன்னொரு முகம் இதுதான், புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள்

சங்கரமடத்திடமும் பிராமணரிடமும் கேட்கும் கேள்வியினை பங்காருவிடம் கேட்டால்தான் என்ன‌?

அம்பாள் பெயரை வைத்து சாம்ராஜ்யம் கட்டியிருக்கும் பங்காருவிடம் கேட்க மாட்டார்கள், மாறாக சும்மா இருக்கும் பிராமணனையே சீண்டிகொண்டிருப்பார்கள்

கலைஞர் திரையில் எழுப்பிய புரட்சி வசனத்தை பார்ப்பானிடம் கேட்பது போல பங்காருவிடம் கேட்டால்தான் என்ன?

அக்கேள்விக்கு பங்காருவே மகா பொருத்தமானவர்

என்ன கேள்வி?

“அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் அறிவு கெட்டவனே”