என்ன சொன்னாலும் இந்த விகடன் திருந்தபோவதில்லை
என்ன சொன்னாலும் இந்த விகடன் திருந்தபோவதில்லை
அந்த திருமுருகன் அன்றே இந்த மானிய ஒழிப்பு பற்றி சொன்னார், அவர் ஒரு தீர்க்கதரிசி என வாய்க்கரிசி போடவேண்டிய விகடன் சொல்லிகொண்டிருக்கின்றது
அப்படி என்ன சொன்னாராம் திருட்டு முருகன்?
அதாவது மேற்குலக நாடுகள் எல்லாம் சேர்ந்து மோடி கையினை பிடித்து ஒப்பந்தம் செய்து மானியகுறைப்பு செய்துவிட்டதாம், இது எல்லா வளரும் நாட்டிலும் உண்டாம்
எல்லா வளரும் நாடு என சொல்வதும் இவர்தான், எல்லா வளரும் நாடுகளும் மானியத்தை ஒழிக்கின்றன என சொன்னவரும் இவர்தான்
அப்படியானால் இந்தியா வல்லரசா?
இந்த திருட்டுமுருகன் சொல்வதென்ன?
காங்கிரஸ் அரசு கூடாது அது தமிழர் விரோதி, பாஜக அரசு கூடாது அது மக்களுக்கு எதிரி..
பின் யார் பிரதமர் என கேட்டால் நானும் வைகோவும் என சிரிக்காமல் சொல்வார்
மேற்குலகம் இப்படி எல்லாம் செய்கின்றது என சொன்ன இந்த திருட்டு முருகன் தான், அதே மேற்குலக சபையில் ஈழபோர்குற்ற விசாரணைக்கு கையேந்தி நின்றவர்
ஏதும் புரிகின்றதா? புரியாது. இதுதான் திருட்டு முருகனின் கொள்கை
இவரை எல்லாம் ஒரு செய்தியாக போட்டுகொண்டிருக்கும் அந்த விகடன் செய்வது என்னவென்று சொல்லி தெரியவேண்டியதில்லை
எப்படி இருந்த விகடன் இப்படி தரம்தாழ்ந்துவிட்டது..