என்ன சொல்லிவிட்டார் குருமுர்த்தி?

என்ன சொல்லிவிட்டார் குருமுர்த்தி? தமிழக முதல்வர் ஆண்மையற்றவர் என சொல்லிவிட்டாரா? இதற்கா இவ்வளவு சர்ச்சை

காந்தி மகனை தன் மகளை காட்டி மயக்கி பதவி பெற்றார் ராஜாஜி என மிக மட்டமான வசைகளை எல்லாம் அன்றே ராஜாஜி மீது பொழிந்த இடம் தமிழகம்

மவுண்பேட்டன் மனைவியினை நேரு ரிலேஷின்ஷிப்பில் வைத்து கொள்ள, நேருவுக்கு பயந்தே வெள்ளையன் சுதந்திரம் கொடுத்தான் என கொஞ்சமும் கூச்சமின்றி சொன்னவர்கள் நிறைந்த தமிழகம் இது

காமராஜர் ஒரு அலி, காமராஜர் ஆண்மை அற்றவர் என்ற குரல் கேட்காத தமிழகமா இது?

ஏய் நடிகனே யாரிடம் கேட்கின்றாய் கணக்கு? வேட்டியினை அவிழ்த்து காட்டட்டுமா? உனக்கு பிள்ளை கணக்கு உண்டா என அந்த ராமசந்திரனை பார்த்து கேட்ட கேள்விகள் எல்லாம் இங்கு ஏராளம்.

இதில் இப்போது பழனிச்சாமி நேரம், அதே கேள்விகள் வருகின்றன.

திராவிட கும்பல்கள் அக்கேள்விகளை கேட்டால், சாதுர்யமான கேள்வி, அட்டகாசமான கேள்வி என கைதட்டியவர்கள் பிராமணன் குருமூர்த்தி கேட்டால் மட்டும் முகம் சுளிப்பார்களாம்

தொடங்கி வைத்தது யார்? சாட்சாத் இவர்கள்தான், இன்று இவர்களே குருமூர்த்திக்கு நாகரீகம் தெரியவில்லை என்கின்றார்கள்