என்ன நாடுடா இது?
இரண்டாம் மருது பாண்டியர்கள் காவேரி மீட்க வாளேந்திய காட்சி
எங்களுக்கு மிக நன்றாக தெரியும், நிச்சயமாக நீவீர் தமிழகத்திற்காய் தற்கொலை செய்வீர் அய்யா
“நாலு பேருக்கு நன்றி, அந்த 4 பேருக்கு நன்றி என்ற புரட்சி தலைவனின் பாடலை பாடிவிட்டு கிளம்புங்கள்
இன்னும் 3 பேர்தான் வேண்டும், நாம் அழைத்துகொண்டு வந்துவிடுகின்றோம்
மத்திய பள்ளி கல்விதுறையின் வினாத்தாள் வெளியானதில் பரபரப்பு, விசாரணை தீவிரம் : செய்தி
என்ன நாடுடா இது?
வெளியாக வேண்டிய ஊழல் விவகாரம், கருப்புபணம், இன்னபிற விஷயங்கள் எல்லாம் ரகசியமாக மறைக்கபடுகின்றது
ரகசியம் காக்கபடவேண்டிய வினாத்தாள் வெளியாகின்றது.
அதிமுக எம்பி தற்கொலை செய்வோம் என பேசியிருப்பது விரும்பதக்கது அல்ல : கி.வீரமணி
இவரும் தமிழக நலனுக்காக தற்கொலை செய்யமாட்டார் , செய்பவர்களை அனுமதிக்கவும் மாட்டார்
தமிழகம் நன்றாக இருக்கவே கூடாது என்பதில் இவருக்கு அவ்வளவு ஆசை
“உரிமைகளைப் பெற்றுத்தர எங்களுக்கு அறிவு இருக்கு” :- ஜெயக்குமார்
அறிவு இல்லாவிட்டால் இன்னும் அமைச்சரவையில் இருக்க முடியுமா? அதெல்லாம் உங்களிடம் நிறைய இருக்கின்றது
ஆனால் உரிமைகளை பெற்றுதர துணிச்சலும் , தைரியமும் வேண்டும், அது உங்களிடம் இருக்கின்றதா?
இப்போது மட்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பவர்கள், நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் தீர்ப்பை ஏற்க மறுத்தனர்? : ஹெச். ராஜா
யாரய்யா மறுத்தார்கள்? அனிதா என்ன மருத்துவகல்லூரி பாடம் பிடிக்காமல் செத்தாளா?
நீட் தேர்வு தீர்ப்பை மீறி யார் இப்பொழுது மருத்துவகல்லூரியில் சென்று அமர்ந்து நானும் மருத்துவர் என சொல்லிகொண்டார்கள்?
தீர்ப்பை ஏற்றுத்தான் மனதால் செத்தார்கள், அனிதா உடலால் செத்தாள்
இதே கேள்வியினை நாங்கள் கேட்கவேண்டும் ராசா
நீட் தேர்வின் தீர்ப்பை உடனே அமுல்படுத்தியவர்கள், காவேரி கண்காணிப்பு வாரியம் அமுல்படுத்தவேண்டும் என்பதை ஏன் அமுல்படுத்தவில்லை?