எப்படி இருந்தன தும்பிகள்?
எப்படி இருந்தன தும்பிகள்?
படகு கட்டி ஈழத்துக்கு செல்லும் வெறி என்ன? தமிழின விரோதி யாராக இருந்தாலும் குரல்வளையினை கடித்து துப்பும் ஆக்ரோஷம் என்ன?
இங்கே தனிநாடு வாங்கி அதில் இனதுரோகி என கலைஞரை அறிவிக்கும் வெறியும் கூச்சலும் என்ன?
எவ்வளவு வீரம்? முழக்கம்?
ஈழத்தை மீட்டு எடுத்துவிட்டு அப்படியே கன்னட அணைகளை உடைக்க துடித்த திணவெடுத்த தோள்கள் எங்கே? ஏந்திய வாள் எங்கே?
காணவே இல்லை
வீர புலிபடை , அருண்மொழிதேவனின் வீரபடை என்ன செய்கின்றது எனபார்த்தால் சில பனங்கொட்டை பொறுக்கிகொண்டிருக்கின்றன
சில வயல்களில் உழுதுகொண்டிருக்கின்றன, காளை மாடு உழவு செய்யலாம், புலி செய்யலாமா? என்றால் சத்தமே இல்லை
இன்னும் சில தும்பிகள் நிலை மகா மோசம்
நாட்டு வைத்தியத்தில் இறங்கி லேகியம் கிண்டிகொண்டிருக்கின்றன, மாறுவேடத்தில் மகிந்த ராஜபக்சே வந்து அவர்களிடம் லேகியம் வாங்கி பலன்பெற்று நன்றி கடிதம் எழுதினாலும் ஆச்சரியமே இல்லை