எப்பொழுதும் எந்த யுத்த செய்தியும் அரேபியாவிலிருந்து வரலாம்.

No automatic alt text available.

வடகொரிய அமெரிக்க யுத்தம் தவிர்க்கபட்டாயிற்று, எத்தனை சீன ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் பறந்தாலும் இந்தியா எச்சரித்துகொண்டே இருக்குமே தவிர யுத்தம் வராது

பிரிட்டனும் ரஷ்யாவும் முறுக்கினாலும் ரஷ்யாவுடன் மோத பிரிட்டன் நிச்சயம் யோசிக்கும்

இப்படிபட்ட நிலையில் உலகில் யுத்தம் இனி வராதா என்றால் மாபெரும் யுத்தம் அரேபியாவில் வெடிக்கும் சாத்தியம் உள்ளது

வளைகுடா நாடுகளில் இப்பொழுது முரட்டு நாடு ஈரான். ஈரானிய புரட்சிக்கு பின்பு அதற்கு பெரும் சிம்ம சொப்பணமாக விளங்கியவர் சதாம் உசேன்

சதாமின் வீழ்ச்சிக்கு பின் அரேபிய பகுதியில் ஈரானின் செல்வாக்கு அதிகம், அதுவும் இப்பொழுது சிரிய போர், ஐஎஸ் இயக்க ஒழிப்பு , ஈராக்கில் ஆதிக்கம் என விஸ்வரூபமெடுக்கின்றது ஈரான்

இது போக ஹமாஸ், ஹிஸ்புல்லா, கவுத்தி என ஏராளமான குழுக்களுக்கு அதுதான் குருநாதார், படியளப்பவர் எல்லாம்.

ஷியா ஈரானின் வளர்ச்சி , சன்னிகளுக்கு எப்படி பொறுக்கும்?

கிட்டதட்ட 8 ஆண்டுகளாகவே வன்மம் வளர்த்து ஆயுதம் வாங்கி குவித்தது சவுதி, காரணம் ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் கொடுக்க தொடங்கிய உடனே அது நடந்தது

விலை உயர்ந்த டைபூன் ரக விமானங்களை எல்லாம் வைத்து பலமாய் இருப்பதாக நினைக்கின்றது சவுதி

ஈரானுக்கும் சவுத்திக்கும் விரோதம் என்றாலும் இருவரும் இன்னும் நேரடியாக மோதவில்லை மாறாக ஈரான் எதிரிகளை சவுதி சீண்டுவதும் , ஏமன் போராளிகளுக்கு ஈரான் ஆயுதம் கொடுப்பதுமாய் சண்டைகள்

இதில் ஏமன் மீது சவுதி தாக்குதல் என்பதற்கு பதிலாக சவுதி மீது ஏவுகனைகளை வீசுகின்றது ஏமன் தரப்பு

ஏவுகனைகள் ஈரானிய தயாரிப்பு

நேற்று 7 ஏவுகனைகள் ரியாத் நோக்கி ஏவபட்டதாகவும் அதனை சவுதி அழித்ததாகவும் செய்திகள் வருகின்றன‌

தடுக்கபட்ட ஏவுகனை விழுந்து ஒருவர் பலி என்பதால் சவுதியின் கோபம் அதிகரிக்கின்றது.

இது இனி பெரும் போராக வெடித்தாலும் வெடிக்கலாம்

இதில் இஸ்ரேலுக்கும் சவுதிக்கும் வெளியில் அடித்துகொண்டாலும் உள்ளூர ஒப்பந்தம் உண்டு, இன்றைய நிலையில் ஈரானே இஸ்ரேலின் எதிரி

அமெரிக்காவின் மாபெரும் எதிரி, பலபேர் முன்னால் காரி துப்பிய நாடு ஈரான், அதனால் அதுவும் பழிவாங்க துடிக்கின்றது

ஆனால் ரஷ்யாவின் ஆசி ஈரானுக்கு உண்டு

நிலமை படு மோசமாகி வருகின்றது. குவைத் பஹ்ரைன் எகிப்து எல்லாம் சவுதியினை ஆதரிக்க, சிரியா லெபனான் போன்றவை ஈரானை ஆதரிக்க்க கச்சை கட்டுகின்றார்கள்

நிச்சயம் யுத்தம் வெடித்தால் அது பெரும் அழிவையும் பேராபத்தையும் கொண்டுவரும்

இருவரில் யார் அழிந்தாலும் சரி என்ற சந்தோஷத்தில் இஸ்ரேல் பார்வையாளராக இருந்தாலும் அதன் குறி ஈரான்

ஈரானோ சண்டை என்று வந்தால் மொத்த அரேபியாவினையும் கலக்கி எடுத்து இஸ்ரேலை பொசுக்கும் திட்டத்தில் இருக்கின்றது

திக் திக் நிமிடங்கள் தொடங்கிவிட்டன‌

உண்மையில் நடப்பது என்ன?

கிட்டதட்ட 35 வருடங்களாக ஈரானை விழுங்க நேரம் பார்த்தது அமெரிக்கா, ஈரானிய புரட்சியில் அது பட்ட அவமானம் கொஞ்சமல்ல, கோமேனிக்கு முன் ஈரான் அமெரிக்க அடிமையாகத்தான் இருந்தது

ஈரான் இருக்கும் வரை சிரியாவில் வெற்றி கிட்டாது என்பதும், அரேபியாவில் தனக்கு ஒரே பெரும் எதிரி ஈரான் என்பதும் அமெரிக்க உடனடி கணக்கு

என்றாவது ஒருநாள் அணுகுண்டுடன் ஈரான் பாயும் அதற்குள் முந்திகொள்ள வேண்டும் என்பது இஸ்ரேலிய கணக்கு

அரபுலகின் இரு பெரிய தேசங்களும், ஷியாக்களின் தலமையும் சன்னிகளின் தலமையும் மோதிக்கொள்ளும் நேரம் நெருங்கிகொண்டிருக்க, பெரும் பதற்றத்தை நோக்கி செல்கின்றது மத்திய கிழக்கு

அரபு நாடுகளின் மிகபெரும் சக்தியாக வந்திருக்க வேண்டிய எகிப்து வல்லரசுகள் விளையாட்டால் தரித்திரமானது

மிக வல்லமையாக சவால்விட்ட சதாமிற்கு பின் ஈராக்கும் ஓய்ந்தது

மிக பெரும் தேசமும் சக்தி மிக்க நாடான சவுதியினை அமெரிக்கா தன் பிடியில் இருந்து தப்பவிடாமல் செய்தாயிற்று

எஞ்சி இருப்பது தனிபெரும் சக்தியுடன் திகழும் ஈரானும், அது கொடுக்கும் சவால் மட்டுமே

அதனையும் ஒரு வழி செய்துவிட்டால் மேற்காசியாவில் இஸ்ரேலுக்கு எதிர்ப்போ, அது செய்யும் அழிச்சாட்டியங்களுக்கு எச்சரிக்கை செய்யவோ யாரும் இருக்கமாட்டார்கள் என்பது தியரி

பாலஸ்தீன போராளிகளுக்கு இன்று உதவும் நாடுகள் ஈரானிய கூட்டணியே, சவுதி பிரிவு சன்னிகள் எல்லாம் இஸ்ரேலின் தந்திர வலையில் சிக்கி பாலஸ்தீனை மறந்து நெடுநாள் ஆயிற்று

ஆனால் யுத்தம் வெடித்தால் சதாமினை தொலைத்தது போல் இந்த யுத்தம் அமெரிக்கா சவுதிக்கு எளிதாயிராது, காரணம் அப்பக்கம் புட்டீன் சிரித்து கொண்டிருக்கின்றார்

அன்றே அப்படி ஒரு பலமிக்க தலைவன் இருந்திருந்தால் சதாம் கொல்ல பட்டிருக்கமாட்டார்

சீனாவின் ஆதரவும் ஈரானுக்கு உண்டு

விவகாரம் சிக்கலாகின்றது, எப்பொழுதும் எந்த யுத்த செய்தியும் அரேபியாவிலிருந்து வரலாம்.

வரமால் போய்விட்டால் எல்லோருக்கும் நல்லது.

ஆனால் பணமும், ஷியா சன்னி வெறியும், ஆயுதமும் தூண்டிவிட பலபேரும் இருக்கும் நிலையில் அவர்கள் காதில் ஏதும் ஏறப்போவதில்லை