எம்ஜியார் நினைவு இல்லம்….
இந்த ராமசந்திரனின் வீடு ஒன்று பாலக்காட்டில் இருக்கின்றதாம், அன்னார் வசித்த வீடாம் அதனால் அதனை அவரின் நினைவு இல்லமாக மாற்றி அவரின் வாழ்க்கை வரலாறை பரப்புவார்களாம்
ராமசந்திரன் பாலக்காட்டில் வசித்தது மிக சொற்பமான நாட்களே என்பது வேறு விஷயம், இப்பொழுது ராமசந்திரனின் வாழ்க்கை வரலாறை விளக்க போகின்றார்களாம்
என்ன வரலாறு?
பெரியார் கொள்கையில் வளர்வதாக சொல்லி பின் பெரியார் சொன்னதையும் மீறி கட்சி உடைத்ததையா?
எல்லோரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருக்க இவர் கோவா சூட்டிங்கில் இருந்ததையா
இந்திராவினை ஆதரிக்கும் எதிர்க்கும் விஷயத்தில் கடும் குழப்பமாகி ஒரு மாதிரி முடிவுகள் எடுத்ததையா?
மிசா எனும் கொடூர சட்டத்தை இவர் வரவேற்றதையா?
காவேரி பிரச்சினை 1978ல் மிக சிக்கலான பொழுது இவர் “உன்னை விடமாட்டேன்” எனும் பட விவாதத்தில் பிசியாக இருந்ததையா?
எரிசாராய ஊழலில் ரே கமிஷனிடம் சிக்கியதையா?
புலிகளை ஆதரிக்கின்றேன் என அள்ளிகொடுத்துவிட்டு பின் பிரபாகரனை வீட்டு காவலில் வைத்ததையும் அமைதிபடை ஈழம் சென்றதை வரவேற்றைதையா?
இதெல்லாம் மிக சில உதாரணங்கள், இன்னும் ஏராளமான மாபெரும் சொதப்பல்கள் உண்டு.
எதிலுமே உறுதி இல்லாத, உருப்படியாக எதுவுமே எண்ணாத, காலமெல்லாம் மாநில சுயாட்சி கொள்கைக்கு விரோதமாக டெல்லிக்கு அடிபணிந்தே இருந்த , இம்மாநில உரிமைகளை மீட்க இங்கு போராட்டம் நடந்தபொழுதெல்லாம் டெல்லியின் அடிமையாக அதனை நசுக்கிய, ஒரு அடிமை தலைவனின் வாழ்வினை விளக்க ஒரு நினைவு இல்லமாம்
கொசுறு
மக்கள் சேவையில் என் உயிர் பிரியட்டும் : கமல் உருக்கம்
இவர் சேவை செய்ய வந்தாலே மக்கள் உயிர் போய்விடும் போலிருக்கின்றது,
அதனால் யார் உயிரும் பிரியாமல் இருக்க, இவர் மக்கள் சேவைக்கு வராமல் இருப்பது நல்லது