எம் தந்தை
“அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.”
அதாவது அன்றொரு நாள் இதே நிலாவின் ஒளியில் எம் தந்தையோடிருந்தோம், இன்று அதே நிலா இருக்கின்றது, நாம் எங்கோ இருக்கின்றோம்
ஆனால் எம் தந்தை இல்லை
இது தன் தந்தையினை இழந்த பாரியின் மகள் கபிலரிடம் புலம்பும் புலம்பல்
அந்த பங்குனி உத்திர நிலாவும் அந்த பாரியின் மகள்களை போலவே நம்மை அழ வைகின்றது.
இந்த நிலாவின் வெளிச்சத்தில்தான் எவ்வளவு கதைகளை நள்ளிரவில் வயல்வெளியில் விடிய விடிய என்னிடம் பேசியிருக்கின்றார் அவர்.
