எம் ராணுவத்தின் பெருமைகள் எல்லாம் வெளிதெரியும் நேரமிது

இலங்கையில் இந்திய ராணுவம் கொடூரமாக நடந்தது, அழிச்சாட்டியங்களை செய்தது என சொல்பவன் எல்லாம் இப்பொழுது எங்கிருக்கின்றான் என தெரியவில்லை

இந்திய ராணுவம் இலங்கையில் கையினை கட்டி போராடியது, அதனால்தான் விமானபடையினை களமிறக்கவில்லை

நினைத்தான் நொடியில் களமிறக்கி பிரபாகரன் மண்டையில் போட கொஞ்சநேரம் ஆகியிருக்காது

ஈழயுத்தத்தை ஈழமக்களும் புலிகளும் கலந்த அந்த கூட்டத்தை இந்திய ராணுவம் கவனமாக அணுகியதன் விளைவே 1500 இந்திய வீரர்களை இழந்தது

இன்னும் பல காரணங்களுக்காக அடிபட்டு அவமானமாக திரும்பியது இந்திய ராணுவம், ஆம் அது தற்காப்பு யுத்தம் நடத்தியதே தவிர திருப்பி அடிக்கும் விஷயத்தை செய்யவே இல்லை

அப்படி ஒதுங்கி வந்த யானையினைத்தான் சில நரிகள் தோற்றோடியது என கொக்கரித்தன‌

பின் 2009ல் சிங்கள விமானபடையின் முன் தாக்குபிடிக்க முடியாமல் ஒழிந்தன அவைகள்

எம் பெருமைமிகு ராணுவம் அன்றே புலிகளை நொடியில் முடிக்கும் வல்லமை இருந்தும் உயிரிழப்பை குறைக்கவே ஒதுங்கி வந்தது

எம் ராணுவத்தின் பெருமைகள் எல்லாம் வெளிதெரியும் நேரமிது

அதனை பொறுக்காத புலி எச்சங்கள் என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருகின்றன

இலங்கையில் உயிர்விட்ட இந்திய ராணுவத்தினருக்காக அமைக்கபட்ட அந்த நினைவாயலம், இலங்கையில் உள்ள அந்த நினைவாலயம் மகா அர்த்தமாக தியாக சின்னமாக இன்று உயர்ந்து நிற்கின்றது

பெரும் விசித்திரம் அது

ஈழ‌ தமிழரை காக்க சென்று ஈழ‌ தமிழரால் கொல்லபட்ட நம் வீரர்களுக்காக ஆச்சரியமாக சிங்கள பூமி கட்டியிருக்கும் நினைவாலயம் அது