எரித்தியா என்றொரு ஆப்ரிக்கா தேசம்

எரித்தியா என்றொரு ஆப்ரிக்கா தேசம் உண்டு அது எத்தியோப்பியா எனும் தரித்திர தேசத்தில் இருந்து பிரிந்தது

எரித்தியா என்பது தமிழன் பூமி என்றும், அன்று சிகப்பு நிற கடல்பாசி கொண்ட நாடு என்றும் அதனால் எரி திரை என அழைக்கபட்டு எரித்தியா ஆனாது என்றும் சில ஆய்வுகள் உண்டு

இந்த தமிழ் ஆய்வாளர்களுக்கு உலகம் என்ன? அண்ட சராசரம் எல்லாமே தமிழனுக்குத்தான்

இவர்கள் இப்படி சொன்னதால் என்னவோ அவர்களுக்கும் ஈழபோராட்டத்துக்குமான தொடர்பு அதிகம்

புலிகளை போலவே எரித்திய விடுதலை முண்ணணி எனும் தீவிரவாத இயக்கம் துப்பாக்கி தூக்கியது

அங்குள்ள பிரபாகரன் அப்வெர்கி, அவர் நாடு அடைந்து அதிபருமானார்

ஒரு ரவுடி இன்னொரு ரவுடிக்கு உதவுவது போல புலிகளை அப்வெர்கி ஆதரித்தார்

கிளிநொச்சி மாநாட்டில் பாலசிங்கம் சொன்ன வார்த்தைகளை நீங்கள் கவனித்திருக்கலாம், எரித்திரியா போன்ற தேசங்கள் எங்களை அங்கீகரிக்கின்றன‌

எரித்தியா ஏதோ வல்லரசு நாடு போல அவர்கள் உளறிகொண்டிருந்தார்கள்

இறுதி யுத்தத்தில் தப்பிய புலிகளின் கப்பலும் விமானமும் சில புலிகளும் இன்னும் எரித்தியாவில் இருக்கலாம் எனும் அளவு பலத்த உளவுபார்த்தல் இன்றும் உண்டு

இப்பொழுது எதற்கு எரித்திரியா கதை?

விஷயம் இருக்கின்றது, நாடு அடைந்த்த எரித்திரியாவினை அந்த சர்வாதிகார கோஷ்டியே ஆண்டது

தேர்தல் என்பது கிடையவே கிடையாது, மாறாக எல்லை மீட்பு யுத்தம் இன்னும் பல யுத்தம் என நாடு நாசமாகி கிடக்கின்றது

இதனிடையே எரித்திய அதிபர் அப்வெர்கி லண்டன் சென்றிருக்கின்றார், அங்கும் புலம் பெயர்ந்த அல்லது வந்தேறி எரித்தியர்கள் உண்டு

அதாவது ஈழதமிழர் அங்கு நிரம்ப உண்டல்லவா அப்படி

இதில் இருவகை அகதிகள் உண்டு 1980களில் எரித்தியா யுத்தம் நடக்கும் பொழுது இன விடுதலைகோஷம் எழுப்பியபடி லண்டன்சென்ற கோஷ்டி ஒன்று

1990களில் எரித்தியா விடுதலை பெற்றபின் தேர்தல் வேண்டும், எல்லை போர் வேண்டாம் என சொல்லி சுதந்திர எரித்தியாவின் மேதகு அப்வெர்கிக்கு பயந்து சென்ற கூட்டம் ஒன்று

ஆக மாவீரர் அப்வெர்கியே வருக என பழைய அகதி கோஷ்டியும் , இனபடுகொலையாளி, இனதுரோகி அப்வெர்கி வரகூடாது என புதிய கோஷ்டியும் லண்டனின் மோதிகொண்டிருக்கின்றன‌

சரி போராடி நாடு அடைந்தார்களே எரித்தியர்கள், தேசம் எப்படி இருக்கின்றது?

நாங்கள் சிங்கப்பூராக மாறுவோம், நாங்கள் ஹாங்காங்காக மாறுவோம் இனவிடுதலை என சொல்லிஆயுதம் தூக்கிய கும்பல் தேர்தலை அனுமதிக்கவில்லை, ஜனநாயகமில்லை

துப்பாக்கி தூக்கிய கும்பலின் அட்டகாசத்தில் நாடு ஒரு முன்னேற்றமின்றி வறுமையில் வாடி அழுது கொண்டிருக்கின்றனர்

இத்தனைக்கும் இலங்கை போலவே வளமான கடற்பாதையில் இருக்கும் நாடு எரித்தியா

ஆக ஈழம் அமைந்திருந்தால் என்னாகியிருக்கும் என்பதை எரித்தியாவினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

ஈழம் அமைந்திருந்தாலும் தேர்தல் கிடையாது, கம்யூனிசம் கிடையாது சகல முடிவுகளையும் பிரபாகரனே எடுத்து ஈழத்தை எரித்திரியா போல ஆக்கியிருப்பார்

தனிதமிழ்நாடு என கிளம்பும் கோஷ்டியும் எரித்தியாவினை பார்த்து பாடம் படிப்பது நல்லது

அவ்வகையில் ஈழமக்கள் பரவாயில்லை அவர்களின் அப்வெரிகி பிரபாகரனை ஒழித்து அம்மக்களை உலகம் காப்பாற்றிவிட்டது

எரித்திரிய பிரபாகரன் அண்டை நாட்டு அதிபருக்கு மனிதவெடிகுண்டு அனுப்பாத காரணத்தால் அவனை தொலைக்க ஆளில்லை

துப்பாக்கி தூக்கிய கட்டபஞ்சாயத்து கோஷ்டியிடம் எரித்தியா சிக்கிவிட்டது

கொஞ்சமும் அரசியல் இல்லா, தொலை நோக்கு இல்லா, ஜனநாயகம் இல்லா காட்டுமிராண்டி கும்பலிடம் நாடு சிக்கினால் என்னாகும் என்பதற்கு எரித்திரியா உதாரணம்

ஈழமும் அப்படி ஆகியிருக்கவேண்டிய நாடு எப்படியோ தப்பிவிட்டது

கண்டி கதிர்காம முருகனும், நல்லூர் கந்தசாமியும் அவர்களை கைவிடவில்லை