எருமை மாட்டு பொங்கல் .. பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்..

பொங்கலுக்கு எல்லோரும் வாழ்த்து சொல்ல கிளம்பியாயிற்று..

எருமை மாட்டு பொங்கல் வாழ்த்து ஏதும் உண்டா? என தெரியவில்லை.

அப்படி இருந்தால் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அவர்களின் அதீதீவிர அடிமைகளுக்கும் தெரிவிக்க வேண்டியது தமிழர்களின் கடமை

அப்படி எருமை பொங்கல் வாழ்த்துகுரியவர்கள் பல பேர் இருக்கின்றார்கள்.

“முதல்” எருமை பொங்கல் வாழ்த்து யாருக்கு சொல்லவேண்டும் என்பது சொல்லி தெரியவேண்டியது அல்ல‌


பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லா டிவிகளும் அறிவிக்கின்றன‌

ஒரு டிவியாவது விவசாயி ஏன் சாகிறான்? அவனுக்குள்ள பிரச்சினை என்ன என ஒரு நிகழ்ச்சியும் செய்யவில்லை

கால்நடை வளர்ப்பிலுள்ள சிக்கல் என்ன என ஒரு நிகழ்ச்சியும் மாட்டுபொங்கலிலும் இல்லை

மாறாக‌

எங்கிருந்தோ தமிழகம் வந்து சினிமா தொழில் செய்ய்யும் நடிகைகள், விவசாயம் அறவே அறியா கூட சரியாக தமிழே தெரியாத நடிகர்களோடு பொங்கல் கொண்டாடுமாம்.

தமிழே தெரியாத நடிகைகள் எல்லாம் தமிழனுக்கு “ஹேப்பி பொங்கல்” வாழ்த்து சொல்லி, தன் திரை அனுபவத்தை எல்லாம் பகிர்ந்து விவசாயி வாழ்வு செழிக்க பாடுபட போகின்றார்களாம்

இப்படி இருக்கின்றது தமிழனின் பொங்கல் கொண்டாட்டம்..

இந்த அநியாயத்தை கேட்க தமிழகத்தில் யாருமே இல்லை.

இவர்கள்தான் மத்திய அரசிடம் இருந்து தமிழன் கலாச்சாரத்தை காப்பாற்ற போகின்றார்களாம்

முதலில் தமிழனின் கலாச்சாரத்தை இம்மாதிரி டிவிக்களிடமிருந்து முதலில் காப்பாற்ற வேண்டும்