எல்லாம் உனக்காக தாங்கினேன் அக்கா, உனக்காக
“அக்கா, என்னையாக்கா கூடபிறந்தவன் இல்ல சொல்ற
உனக்காக எவ்வளவு அடிவாங்கி இருக்கேன் தெரியுமாக்கா, எத்தனை பேர் மண்டை அடிச்சு உடைச்சான் தெரியுமாக்கா
எல்லாம் உனக்காக தாங்கினேன் அக்கா, உனக்காக
அன்னைக்கு எதிர் கோஷ்டி எல்லாம் எட்டி எட்டி உதைச்சாங்க அக்கா, எட்டி எட்டி உதைச்சாங்க, ரத்தமா கொட்டிச்சிக்கா ரத்தமா கொட்டிச்சி
ஒரு வார்த்தை பேசிருப்பனா அக்கா, நா வாயை திறந்து பேசினா அத்தான் அன்னைக்கே ஜெயிலுக்கு போயிருப்பாருக்கா
நான் மட்டும் அன்னைக்கு வாய்திறந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா, என்னையா சந்தேகபடுற அக்கா.”
கரகாட்டகாரன் சன்முக சுந்தரம் டயலாக் இப்பொழுது திவாகரனுக்கும் பொருந்துகின்றது
கரகாட்டகார கோஷ்டி அரசியலில் இதெல்லாம் சகஜம்

தன் பெயரையோ படத்தையோ, தான் உடன்பிறந்த சகோதரி என்ற வார்த்தையினையோ திவாகரன் பயன்படுத்த கூடாது என சசிகலா உத்தரவிட்டுள்ளாராம்
யாரையோ உடன்பிறவா சகோதரி, அக்கா என சொல்லிகொண்டிருந்தவருக்கு தன் சொந்த தம்பியினை உடன்பிறப்பு என சொல்ல வருத்தமாம்
அரசியலும் பணமும் எத்தனை உறவுகளை பிரிக்கின்றன?
போகட்டும், உடன்பிறந்த சகோதரி என சொல்ல கூடாது என்றுதான் உத்தரவு, உடன்பிறவா சகோதரி என்ற கட்சியின் டிரேட் மார்க் வசனத்தை திவாகரன் பேசினால் சசிகலா என்ன செய்வார்?
அக்கட்சியில் உடன்பிறவா உறவுகளுக்குத்தான் மவுசு
திமுகவில் எ.வ வேலு என்றொருவர் இருகின்றார், திடீரென திமுகவில் மேலிடங்களுக்கு நெருக்கமானார்
நேற்றொரு மேடையில் திருவண்ணாமலை கோவில் பெருமை , புண்ணிய பூமி பெருமையினை அப்படி பேசிகொண்டிருக்கின்றார்
வாழ்க பகுத்தறிவு, வளர்க நாத்திகம்