எல்லாம் ஊழல், எல்லாம் கலப்படம்
நெல்லை மாவட்டம் வாகைகுளம் அருகே சுடுகாட்டு கொட்டகை இடிந்து இருவரை கொன்றிருக்கின்றது
முன்பு தமிழகத்தில் பஸ்நிலையம் இடிந்து 5 பேரை கொன்றது, நெல்லை ஆற்றுபாலம் மழையில் விழுந்தது
வளர்ச்சி திட்டம் எனும் பெயரில் தரமில்லா கட்டங்களை கட்டி பணத்தையும் வீணாக்கி, இப்பொழுது உயிரினையும் கொல்ல தொடங்கியாயிற்று
எல்லாம் ஊழல், எல்லாம் கலப்படம்
அரசு பணத்தை நேரடியாக அடிக்க முடியாமல் காண்ட்ராக்டர்களுக்கு கொடுத்து அவர்களிடம் இருந்து கமிஷனாக பிடுங்குவதால் வரும் சிக்கல் இது
மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை பிடுங்கிய பின் எஞ்சிய காசில் கலப்பட மண்தான் வரும், அதை வைத்து கட்டினால் இப்படித்தான் ஆகும்
இதை எல்லாம் யாரும் விசாரிக்கமாட்டார்கள், இதை கட்டியவன் யார்? இதற்கு உத்திரவாதம் கொடுத்தவன் யார் என்பது பற்றி எல்லாம் எந்த செய்தியும் வராது, விசாரணையும் நடக்காது
உண்மையில் நடந்திருப்பது கொலை