எல்லாவற்றையும் கடந்து சென்றவர் கலைஞர்

கலைஞர் மேல் அவதூறு கிளம்புவது முதல் முறை அல்ல, வரலாறு எங்கும் காணகிடக்கின்றது

எப்பொழுதெல்லாம் அம்மனிதன் மீது குற்றம்சாட்ட வழி இல்லையோ அப்பொழுதெல்லாம் என்னவெல்லாமோ 1960களிலே கேட்டார்கள்

பேசவே நாகூசும் வார்த்தைகள் எல்லாம் அவர் மீது வீசபட்டன‌

அவரே சொன்னது போல “விவரமறிந்த வயதியிலிருந்தே இழித்தும் பழித்தும் பேச கூடிய சாதியில் பிறந்தவன் நான், எவ்வளவோ அவமானங்களை சாதி இழிவில் சுமந்து பெரியாரின் கொள்கையால் கடந்தவன்

இழித்தும் பழித்தும் பேசபடும் சொற்கள் எனக்கு புதிதல்ல”

கலைஞரின் அணுகுமுறை அப்படித்தான் இருந்தது, பழுத்த அனுபவம் இருந்ததால் எல்லாவற்றையும் கடந்து சென்றார்

கடும் வெள்ளம் மலையினை என்ன செய்யும்? கடல் அலை மீனை என்ன செய்துவிடும்? என்பது போல் மகா உறுதியாக எல்லாவற்றையும் கடந்து சென்றவர் கலைஞர்