எல்லையில் வாலை ஆட்டுகின்றது சீனா

மறுபடியும் எல்லையில் வாலை ஆட்டுகின்றது சீனா, சாலை அமைக்கும் அதே நரிதந்திர வேலையில் கண்ணமூச்சி ஆடுகின்றது

நமது பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அங்கு நேரடியாக செல்ல முனைந்திருக்கின்றார், வாழ்த்துக்கள்

ஆனால் மோசமான காலநிலை என அவர் அப்பகுதிக்கு இன்னும் செல்லமுடியவில்லை என செய்திகள் சொல்கின்றன. எப்படியோ நிர்மலாவின் அப்பயணத்திற்கு சல்யூட்

அம்மணி பரவாயில்லை உலகின் மிக உயர்ந்த போர்களமான சியாச்சினிக்கு செல்கின்றார் , இப்பொழுது நாலந்துலா செல்கின்றார் உண்மையில் பாராட்டவேண்டிய பணி அந்த வீரர்களுக்கு அது அவ்வளவு உற்சாகம் கொடுக்கும்.

நிர்மலா சீத்தாராமன் மீது கட்சி, கொள்கை இன்னபிற சர்ச்சைகள் இருக்கலாம், ஆனால் இப்பொழுது அவர் பொறுப்பான அமைச்சர். அச்சூழலில் அவர் செய்யும் காரியங்களை பாராட்டியே தீரவேண்டும்

அந்த தமிழக பெண்சிங்கம் கொஞ்சம் கச்சதீவு பக்கம் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும், வருவார் என எதிர்பார்க்கலாம்

சீனாவின் மறைமுக ஆட்டம், நிர்மலாவின் விசிட் கூடவே எப்பொழுதும் இந்திய விமானபடை யுத்தத்திற்கு தயார் எனும் தளபதியின் சீற்றம் எல்லாம் மறுபடியும் பரபரப்பினை ஏற்படுத்துகின்றது