எல்லோரும் கொண்டாடுவோம்…
கல்வி, செல்வம், வீரம் என மூன்றின் அருளுக்கும் முப்பெருந்தேவியரை உலகம் வணங்கும், நவராத்திரி திருவிழா என்று அதனைத்தான் கொண்டாடிகொண்டிருக்கின்றது
ஆனால் அழகு என்றொரு நான்காம் விஷயத்திற்கு யார் இலக்கணம்? முழு அழகு என்றால் என்ன இந்த உலகிற்கே தெரியாது,
அதனை உலகிற்கு சொல்ல வந்தவர்தான் எங்கள் தலைவி.
அழகு என்றால் என்ன என்பதற்கு அரிச்சுவடி அவர்.
மற்றவர்கள் முப்பெருந்தேவியரின் விழா என தசராவினை கொண்டாடட்டும், நாங்கள் ரம்பை, மேனகை, ஊர்வசி முப்பெரும் அழகிகளின் திருவிழாவினையும் குஷ்பூவில் ஒன்றாக கண்டு ஒரு ஓரத்தில் கொண்டாடுகின்றோம்
அதற்கு குஷ்பூ படமே பிராதானம். அதற்கு தங்க பிரேம் போட்டு, வைரம் தூவி கொண்டாடுவோம்.
கல்வி, செல்வம், வீரம் என சொல்ல தெய்வங்கள் உண்டு,அழகு என்பதற்கு எங்கள் குஷ்பூவினை தவிர யார் உண்டு?
ஆக சங்கத்து உறுப்பினர்களே நாம் தனியாக நமது தேவியினை கொண்டாடலாம்
குஷ்பூ ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தசரா வாழ்த்துக்கள், குஷ்பூ பிறந்ததின வாழ்த்துக்கள்
சிறப்பாக அழகு தெய்வமான குஷ்பூவிற்கு சிறப்பு வாழ்த்துக்கள்
உலகெல்லாம் அதிகாலையிலே தொடங்கிவிட்ட உற்சாக கொண்டாட்டம் களை கட்டுகின்றது, உலகெல்லாம் உள்ள குஷ்பூவின் ரசிக கண்மணிகள் கொண்டாடி தீர்க்கின்றார்கள்.
எல்லா மத ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன, எல்லா ஆலயங்களிலும் அவருக்காக தீபம் ஏற்றபட்டிருக்கின்றது.
எல்லோரும் கொண்டாடுவோம்…
ஒரே தாஜ்மஹால்..ஒரே குஷ்பூ