எழுதியவனுக்கு சிக்கலே இல்லை என்பதுதான் ஆச்சரியம்

Image may contain: 1 person, smilingஎஸ் வீ சேகர் என்பவர் சர்ச்சையான நபர்தான், அடிக்கடி எதனையாவது சொல்லி மாட்டிகொள்பவர்தான், “இந்தி தெரியாமல் சரவணபவனில் தோசை சாப்பிடமுடியுமா?” என்றெல்லாம் கேட்டு வாங்கி கட்டியவர்தான்.

ஆனால் இந்த பத்திரிகையாளர் சல்சா சர்ச்சையினை அவர் சொல்லவில்லை, யாரோ எழுதினார்கள். இவர் பகிர்ந்தார்

எழுதியவன் முந்தைய நாளே அக்கவுண்டை முடக்கிவிட்டு பறந்தே விட்டான், சேகர் மாட்டிகொண்டார்

எங்கெல்லாமோ வழக்கு தொடர்ந்திருகின்றார்களாம், இனி கோர்ட்டில் யார் எழுதியது என விளங்கும்

Image may contain: 1 person, smiling, beard and close-upதமிழர்கள் வித்தியாசமானவர்கள், எழுதியவனை விட்டுவிட்டார்கள். அவன் எங்கோ இருந்து டீ குடித்துகொண்டு சேகர் அடிவாங்குவதை பார்த்துகொண்டிருகலாம்

அவ்வளவு ஏன்? அந்த கூட்டத்திலே பதாகை பிடித்துகொண்டு எஸ்வீ சேகரை திட்டிகொண்டிருக்கலாம்

நிச்சயமாக அது எஸ்.வீ சேகர் கருத்தே அல்ல, அவர் நான் எழுதவில்லை என சொன்னாலும், “எழுதியவன் எவனாகவும் இருக்கட்டும், நீ எப்படி ஷேர் செய்யலாம்” என கொலைவெறியோடு நிற்கின்றார்கள்

எழுதியவனுக்கு சிக்கலே இல்லை என்பதுதான் ஆச்சரியம்

தமிழர்கள் எப்பொழுதும் அப்படித்தான், அதிமுக அரசு சரியில்லை பழனிச்சாமி ஒழிக என்பார்கள், ஆனால் கட்சி தொடங்கிய ராமசந்திரனை இன்னொரு பக்கம் வணங்குவார்கள்

முன்பு பழனிச்சாமியினை அமைச்சராக்கிய ஜெயாவினை போற்றுவார்கள், பன்னீரை திட்டுவார்கள் அவரை முதல்வராக அறிமுகபடுத்திய ஜெயா மிக சிறந்த நிர்வாகி என்பார்கள்

இங்கு எந்த சர்சையினையும் தொடங்கியவனுக்கு சிக்கலே இல்லை இடையில் தொடர்பவன் மாட்டுவான்

இப்பொழுதும் ஐபிஎல் நடக்கா தமிழகத்தில் சினிமா எப்படி வெளிவரலாம் என பாரதிராஜாவினை போட்டு அடிப்பதை விட, அந்த ஐடியாவினை முதலில் சொன்ன ஜேம்ஸ் வசந்தனைத்தான் போட்டு சாத்த வேண்டும்

வீட்டை பூட்டிகொண்டு ஐபில் பார்த்து கைதட்டிகொண்டிருக்கும் ஜேம்ஸ் வசந்தனுக்கு இருக்கின்றது ஒரு நாள்

மவனே ஜேம்ஸ் வசந்தா? இருகின்றாயா இல்லையா? இனி உனக்கு வசந்த காலமே இல்லை ,

விரைவில் இருக்கின்றது உன் மேல் கெயில் அடி.