எழுத்தாளர் சவுபா என்பவருக்கு மாபெரும் துயர முடிவு ஏற்பட்டிருகின்றது

எழுத்தாளர் சவுபா என்பவருக்கு மாபெரும் துயர முடிவு ஏற்பட்டிருகின்றது

குடிகார மகனை கொன்ற வழக்கில் அவர் சிறையில் இருந்தவர், செத்தும் விட்டார். பெரும் சோகம் இது

நிச்சயம் நல்ல எழுத்தாளன் என்பவன் இளகிய மனமுள்ளவன், அந்த மனமே அவனை மிக சிறந்த படைப்புகளை உருவாக்க வைக்கும், வரலாறு கண்ட உண்மை இது

ஆனால் அந்த மனம் பெரும் நெருக்கடிகளை சிந்தனையில் வாழ்வில் சந்திக்கும், சாதரண நெருக்கடிகளை விட எழுத்தாளன் சந்திக்கும் நெருக்கடி மிக அதிகம்

பணம், அந்தஸ்து என ஓடும் உலகில் அவனால் ஒட்டமுடியாது

எல்லா கலைஞனுக்கும் ஒரு வடிகால் தேவையாயிருக்கின்றது, அதுவே அவனை சகல துக்கங்களிலிருந்தும் மீண்டெழ செய்யும்

பாரதியும், ஜெயகாந்தனும் கஞ்சாவில் ஆறுதல் அடைந்தார்கள்

நா.முத்துகுமார் போன்றவர்கள் மதுவிலே சோகத்தை மறந்தார்கள்

கண்ணதாசன் மதுவிலும் மாதுவிலும் தேடிவிட்டு பின் பகவானின் பாதங்களில் விழுந்தார், உடல் ஒத்துழைக்கவில்லை

(கலைஞர் போன்றவர்கள் விதிவிலக்கு பல களங்களில் சுற்றிவந்ததால் தனக்கான ஆறுதலை அவரே தேடிகொண்டார்..)

தமிழுலகின் மிகபெரிய சாபக்கேடு நல்ல திறமையானவர்களை சினிமாவும் அரசியலும் வீணடித்துவிடும்

ஏராளமான சிறந்த எழுத்தாளர் சினிமா கனவிலும், வலம்புரி ஜாண் போன்றவர்கள் அரசியலிலும் திறமையினை தொலைத்தனர்

எந்த எழுத்தாளனுக்கும் ஒரு நம்பிக்கை , ஒரு ஆறுதல் கட்டாயம் தேவை

அது பக்தியோ, குடும்பமோ இல்லை ஏதோ ஒரு ஆறுதலோ அரவணைப்போ கட்டாயம் தேவை

உமறுபுலவருக்கு சீதக்காதியும், கம்பனுக்கு சடையப்ப வள்ளலும் அப்படி இருந்தார்கள்

அப்படி அமையாத கலைஞன் துரதிருஷ்டம் பிடித்தவன்

சௌபா என்பவருக்கும் அந்த துரதிருஷ்டம் வாய்த்துவிட்டது சோகம், ஆழ்ந்த அஞ்சலிகண்ணீர் வடிப்பதை விட நாம் என்ன செய்யமுடியும்?