எவ்வளவு நல்ல ஆடுகள் அவை..

அக்காலத்தில் குக்கர் கிடையாது, மைக்ரோ வேவ் இம்சைகள் கிடையாது, வெறும் மண்சட்டிதான் ஆனாலும் வெட்டிபோட்டால் ஆடு சமத்தாக வெந்திருக்கின்றது.

எவ்வளவு நல்ல ஆடுகள் அவை..

இப்பொழுது என்னதான் குக்கரில் வேகவைத்தாலும் அது வேக மறுக்கின்றது, இப்போதுள்ள ஆடுகள் எல்லாமே கள்ளமும் கபடும் நிறைந்த ஆடுகள் போல‌

இவ்வுலகில் மனிதர்கள்தான் மாறிகொண்டே வருகின்றார்கள் என்றால், ஆட்டுகறியுமா மாறிகொண்டே வரவேண்டும்?


நண்பர் Vivek Vivekanandam கொடுத்த பாதுஷா எனும் இனிப்பில் தொடங்குகின்றது தீபாவளி கொண்டாட்டம்

நண்பர் கோவைக்காரர், அதனால் கோவை மக்களின் இயல்பான நல்ல மனிதர், நல்ல மனிதர் என்பதை விட இப்படியான சமையல்களில் திடீரென அசத்துபவர்

சும்மா சொல்ல கூடாது, மிக கர்ம சிரத்தையாக , சிலை செய்யும் சிற்பிக்குள்ள பொறுமையும் ரசனையும் கொண்டு அதனை செதுக்கி செதுக்கி சமைத்திருக்கின்றார்

சுவை அள்ளுகின்றது

இனி நண்பர் எப்பொழுது இப்படியான நல்ல பதார்த்தங்களை செய்வார் என்பது எளிதாக கணிக்க கூடியது, மகா நல்ல மனிதர் எனினும் அவருக்கு ஒரு பலவீனம் உண்டு

அதாகபட்டது மனிதர் சிம்பு ரசிகர், வெறியர் இன்னபிற வகையறா, இனி சிம்பு படம் வரும்பொழுது இம்மாதிரி சுவை கொட்ட கொட்ட சமைப்பார் என்பது உறுதி

ஆனால் சிம்பு படம் இப்போதைக்கு வருவது போல் தெரியவில்லை என்பதால் இனி நெடுங்காலம் இந்த பாதுஷாவிற்கு காத்திருக்க வேண்டும்

நண்பர் கொடுத்த‌ இனிப்பான தொடக்கத்தோடு அழைத்திருக்கும் நண்பர்கள் வீட்டிற்கான தீபாவளி “பல்சுவை” பயணத்தினை சமூகம் தொடங்குகின்றது.