இன்றைய தமிழக அரசியல் செய்தி ஸ்கூப்ஸ்
மே 2ம் தேதி டெல்லி செல்கின்றார் முதல்வர் பழனிச்சாமி : செய்தி
“கைபுள்ள அருவாளோட கிளம்பிட்டான், எத்தனை தலை உருளபோகுதோ…..”
மக்கள் அமர சிம்மாசனம் செதுக்கி கொண்டிருக்கின்றோம் : கமலஹாசன்
மக்கள் உமக்கு கிட்டதட்ட 60 அடி ஆழத்திற்கு தோண்டிகொண்டிருக்கின்றார்கள் அய்யா,
அதிமுகவின் அடிச்சுவடே இல்லாமல் டிடிவியால் கட்சி நடத்த முடியாது: திவாகரன் பரபரப்பு பேட்டி
அதிமுகவின் அடிசுவடு என்ன? கலைஞரை எதிர்த்து மண் அள்ளி தூற்றுவதுதானே
இனி அவர் இல்லாது எப்படி அரசியல் அதிமுக செய்யும்? திவாகரன் சரியாக சொல்லியிருக்கின்றார்
அதிமுகவின் அடிச்சுவடே இல்லாமல் டிடிவியால் கட்சி நடத்த முடியாது: திவாகரன் பரபரப்பு பேட்டி
அதிமுகவின் அடிசுவடு என்ன? கலைஞரை எதிர்த்து மண் அள்ளி தூற்றுவதுதானே
இனி அவர் இல்லாது எப்படி அரசியல் அதிமுக செய்யும்? திவாகரன் சரியாக சொல்லியிருக்கின்றார்
டி.டி.வி.அணி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு : செய்தி
முன்பெல்லாம் சந்திரலேகா மேல் ஆசிட் வீச்சு, வக்கீல் மீது உருட்டுகட்டை தாக்குதல், கங்கை அமரனுக்கு மிரட்டல் என செய்துகொண்டிருந்தார்கள்
அட்டகாசம் கொஞ்சமல்ல
இப்பொழுதுதான் அவர்களுக்குள்ளே தொடங்கி இருக்கின்றது, ஒழியட்டும்
முக ஸ்டாலினுக்கு கலைஞர் என நினைப்பு : விஜயகாந்த்
பிரேமலதா கூட தான் ஜெயலலிதா என்ற நினைப்பிலே இருக்கின்றார், அதை பற்றி அன்னாரின் கருத்து என்ன என தெரியவில்லை
தன்னை கருப்பு எம்ஜிஆர் என முன்பு சொல்லிகொண்டவர், முக முத்து போல் ஆகிகொண்டிருப்பதுதான் பரிதாபம்
முன்பெல்லாம் ஏதும் சர்ச்சை பேட்டி என்றால் உடனே அந்த பேப்பரை தீயிட்டு கொளுத்துவார்கள், சர்ச்சைகுரிய செய்தி வந்த ஊடகத்தின் தாள் கொளுத்தபடும்
இப்படியே அரசியல் சட்ட நகலை கூட கொளுத்துவார்கள்
எஸ்வீ சேகரின் சர்ச்சை செய்தி எல்லோர் போனிலும், லேப்டாப்பிலும் இருக்கின்றது, ஆனால் அதை யாரும் உடைத்து, தெருவில் வீசி போராடியதாக தெரியவில்லை
அவ்வளவு பாதுகாப்பான போராளிகள்
3 நாட்களில் வெளிவருவேன் தலைமறைவான எஸ்.வீ சேகர் சொன்னதாக செய்தி
எஸ் வீ சேகர் இப்பொழுது எஸ்கேப் சேகர்.
ஆனாலும் இயேசு போல 3ம் நாள் வருவேன், பரிசுத்த ஆவி போல் 40ம் நாள் வருவேன் என சவுடால் விட தவறவில்லை
எங்கே ஆளுநரை இந்த பத்திரிகையாளர்கள் வரிந்து கட்டி எழுதிவிடுவார்களோ என அஞ்சி, பத்திரிகையாளர்களை வசமாக திசை திருப்பிவிட்டு எப்படி என் சாமார்த்தியம் என தன் சாணக்கிய குடுமியினை முடிந்து கொண்டிருக்கின்றார் “எஸ்கேப்” சேகர்
இப்பொழுதும் ஊடகங்கள் எஸ்கேப் சேகரை தேடுகின்றதே தவிர ஆளுநர் பக்கம் செல்லவே இல்லை
உலகின் வினோதமான உயிரினம் அர்ஜென்டினாவில் தென்பட்டது , ஆய்வுக்காக பின் தொடரும் முன் மறைந்தது : செய்தி
இங்கும்தான் பாரிசாலன் என்றொரு வினோத உயிரினம் மனித உருவில் சுற்றிகொண்டிருக்கின்றது, நாங்கள் எல்லாம் வேடிக்கை மட்டும் பார்க்கின்றோம்
இதனை பிடித்து கொண்டு போய் ஆய்வு செய்யுங்கள்
சிறைச்சாலை நாம் தமிழருக்கு கோவில் போன்றது : மன்சூர் அலிகான்
தூண்டிவிட்ட அங்கிள் சைமன் இன்னும் சிறைக்கு வராத கோபத்தை, சைத்தான் இன்னும் உள்ளே வரவில்லை எப்படி நயமாக சொல்கின்றார் மன்சூர்,
மனிதர் உண்மையிலே வில்லன் போல
அங்கிள் சைமன் கேட்டுச்சா,அது கோவிலாம் உடனே செல்லுங்கள்