ஏக்நாத் ராணடே

அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு வன்முறை இயக்கம் என்றும், அது ஒருமாதிரியான போக்கு கொண்டது என்றும் பெரும் பொய்பிம்பம் தமிழகத்தில் கட்டமைக்கபட்டிருக்கலாம் உண்மை அது அல்ல‌

அதன் அடிப்படை பயிற்சியே வன்முறையில் அல்ல எல்லா மக்களையும் இந்தியராக திரட்டி ஓரணிக்கு கொண்டுவந்து இந்நாட்டின் கலாச்சாரத்தையும் தனிதன்மையினையும் காக்க வேண்டும் என்பதன்றி வேறல்ல‌

வரலாற்றில் அது கலவரம் செய்த காட்சிகளை எங்கும் காணமுடியாது

அது 1948ல் காந்தி கொலைக்கு தாங்கள் காரணம் என தடைசெய்யபட்டபொழுதும் கலவரம் செய்யவில்லை , எவ்வளவோ இடங்களில் அதன் தொண்டர்கள் தாக்கபட்டு கொல்லபட்டபொழுது கூட, சென்னையில் அதன் அலுவலகம் தகர்க்கபட்டு 11 பேர் கொடூரமாக கொல்லபட்டபோது கூட அது எதிர்வினை கடுமையாக ஆற்றவில்லை

இவ்வளவுக்கும் உலகில் அதிகம் உறுப்பினர்களை கொண்ட பெரும் இயக்கம் அதுதான்

அதன் வழி தர்மமும் அறமும் கலந்தது, அராஜகமோ பலாத்காரமோ அவர்கள் அறியாதது. எல்லா விஷயத்தையும் சட்டபூர்வமாகவும் மக்களின் ஒரே கருத்துடனுமே செய்யவேண்டும் என்பது அவர்களுக்கான அடிப்படை பயிற்சி

அந்த பயிற்சி பட்டவர்த்தனமாக தெரிந்த இடம் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் அந்த மகானுக்கு நினைவிடம் அமைக்கபட்ட காலம்

கொஞ்சம் அசந்தாலும் பெரும் கலவரம் வெடித்து தீரா மோதலுக்கு வழிசெய்யபட்டிருக்கும் விவகாரத்தை ஒரு ஆர்.எஸ்.எஸ் மாமனிதர் மிக அழகாக தீர்த்து வைத்தார், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உண்மையான வேரும் முகமும் அவராலேதான் தெரியவந்தது

அம்மனிதர் மட்டும் இல்லை என்றால் இன்று காணும் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவிடம் இல்லை,
எக்காலமும் அவர் நன்றியோடு நோக்கபட வேண்டியவர்

அவர் பெயர் ராணடே, ஏக்நாத் ராணடே, அவரின் நினைவுநாளில் அவரின் ஆகசிறந்த தேச சேவையினை அமைதியாக மாபெரும் சிக்கலை தீர்த்த ராஜந்தந்திரத்தை நினைவு கூர்வது தேசாபிமானிகளின் கடமையாகின்றது

அது 1963ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம், சீனப்போரில் ஆர்.எஸ்.எஸ் உருப்படியாக பணியாற்ற நேருவுக்கும் அவர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்த நேரம், 1948ல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்த நேரு இம்முறை அவர்களின் தேசபக்தியினை ஒப்புகொண்டு அங்கீகரித்து ஏற்றுகொண்டிருந்தார்

சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டுவிழா அப்பொழுது தொடங்குகின்றது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கொண்டாட தொடங்கினார்கள். அப்பொழுது அவர்கள் மனதில் உதித்த திட்டம்தான் கன்னியாகுமரி பாறையில் விவேகானந்தர் தவம் செய்த இடத்தில் மண்டபம் கட்டுவது

உண்மையில் சிகோகோ சொற்பொழிவுக்கு பின் கொழும்பு வழியாக அவர் வந்து இறங்கிய மண்டபம் கடற்கரையில்தான் கட்டியிருக்க வேண்டும், ஆனால் கன்னியாகுமரி இந்திய எல்லை என்பதால் அந்த பாறை தேர்வானது

அது அதுவரை ஸ்ரீபாத மலை. அதாவது உமாதேவியின் பாதம் பதிந்த பாறை என்றுதான் அழைக்கபட்டது, இன்றுவரை அப்பாறைக்கு அதுதான் அடையாளம்

அன்னையின் திருபாதம் இப்பொழுதும் அங்கு தடமாய் பதிந்து நிற்கின்றது

சுவாமி விவேகானந்தர் அங்கு தியானம் செய்ய சென்றது கூட அது அன்னை தவமிருந்த பாறை, அங்கு தானும் தவம் செய்யவேண்டு எனும் பெரும் ஆவலே அன்றி வேறேதும் அல்ல, அன்னையின் ஞான அருளை வாங்கும் பொருட்டுத்தான் சுவாமி அங்கு தவமிருந்தார்

அதுவும் அங்கு மொட்டைபாறையில் வெயிலிலும் குளிரிலும் அவர் தவமிருந்த காட்சி இன்று நினைத்தாலும் கண்ணீர் வரும் காட்சி, மாபெரும் சமய மாநாட்டில் இந்துக்களின் பெருமையினை பேச செல்லும் முன் பெரும் ஞானம் வேண்டி அந்த கடும் தவத்தை மெற்கொண்டிருந்தார் சுவாமி, அந்த ஞானத்தில்தான் அழியா சொற்பொழிவினை இந்துமதத்தை தூக்கி நிறுத்திய ஞான சொற்பொழிவினை சிகாகோவில் பேசினார்

அந்த நன்றிக்குத்தான் அவருக்கு அந்த இடத்தில் மண்டபம் கட்ட முனைந்தனர் தேச இந்துக்கள், அது கட்டாயம் அமைக்கபடவேண்டிய மண்டபம்

ஆனால் எல்லாம் நன்றாக தொடங்கியபொழுது சிக்கல் குமரி கிறிஸ்தவர் வடிவில் வந்தது. திடீரென சிலுவை நட்டு இது பிரான்சிஸ் சேவியர் பாறை என்றார்கள். பிரான்ஸிஸ் சேவியர் எனும் பாதிரி 15ம் நூற்றாண்டில் அங்கு தங்கியிருந்தார் என சர்ச்சையினை கிளப்பினார்கள்

அதுவரை இல்லா சிலுவை திடீரென வந்தது, பிரான்ஸிஸ் சேவியர் பெயரில் வந்தது

அந்த பிரான்ஸிஸ் சேவியர் என்பவர் சர்ச்சைகளின் நாயகன், கோவாவின் கொடிய மதமாற்றத்துக்கும் அதை தொடர்ந்த உலகம் காணா சித்திரவதைக்கும், கிறிஸ்தவர்களாக மாறியும் இந்துவாழ்க்கை வாழ்ந்த அந்த அபலைகள் மேல் கொடிய புனித விசாரணை நடந்து பல்லாயிரகணக்கான மக்கள் சாக அவர்தான் காரணம்

ஈவு இரக்கமின்றி மக்களை வதைக்க வழிசெய்த அந்த சதிகாரனின் சதி ஏகபட்ட படுகொலைகளை அவன் காலத்துக்கு பின்பும் போர்ச்சுகீசிய கொடியவர்கள் கோவா பக்கம் தொடர்ந்தார்கள், வீரசிவாஜிதான் அதனை தடுத்து நிறுத்தினான்

அப்படிபட்ட இன்னொரு முகமுள்ள துறவி அவன், கடும்போக்கான அவனுக்கு இரக்கமுமில்லை கருணையுமில்லை, கிறிஸ்தவரல்லா யாரும் வாழ தகுதியற்றவர்கள் என்பது அவன் கருத்து

அவன் தென்னகமும் வந்திருக்கின்றான், நாகர்கோவிலின் கோட்டாறு, கிழக்கே மணப்பாடு ஆகிய பகுதிகளில் வசித்திருக்கின்றான் ஆனால் இப்பாறைக்கு வரவில்லை

அப்படி வந்திருந்தால் அவனை

பிரான்ஸிஸ் சேவியர் மணப்பாட்டில் வாழ்ந்தவர், கோட்டாரில் போதித்தவர்

இந்த பாறைக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை

ஆனால் கிறிஸ்தவர் கொடிபிடித்தனர், ஆச்சரியமாக அவர்களை விரட்டிவிட்ட கேரளத்தவரும் கொடிபிடித்தனர் பெரும் கலவர சூழல் ஆயிற்று

சிக்கல் இழுத்து கொண்டே சென்றது, குமரிமாவட்ட பாதிரியார்கள் களத்தில் இறங்கி கிறிஸ்துவர்களை தூண்டிவிட்டபடி இருந்தார்கள், விவகாரம் பற்றி எரிந்தது

அதுவரை அப்பாறைக்கு சொந்தம் கொண்டாடா கிறிஸ்தவ கூட்டம், பல்லாயிரம் தலைமுறைளாக அன்னை தவமிருந்த மலைதான் என ஒதுங்கி இருந்த கிறிஸ்தவ கூட்டம் விவேகானந்தருக்கு மண்டபம் என்றதும் ஆட தொடங்கிற்று, அவர்கள் வாதத்திலும் போராட்டத்திலும் உண்மை சிலுவையில் அறையபட்டு கடும் பொய் ஒன்றே உயிர்த்தெழுந்திருந்தது

அந்நேரம் காமராஜர் முதல்வர் பதவியினை ராஜினாமா செய்திருந்தார் அப்போதைய முதல்வராக பக்தவச்சலம் அமார்ந்திருந்தார்

முதல்வர் பக்தவச்சலம் விவேகானந்தர் மண்டபமும் வேண்டாம், சேவியர் சிலுவையும் வேண்டாம் அமைதி முக்கியம் என அறிவித்துவிட்டார்.

இந்து கிறிஸ்தவ மோதலை தடுக்க அவருக்கும் வேறுவழி தெரியவில்லை

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இதனால் பின்வாங்கவில்லை, ஏக்நாத் ரானடே என்பவரை அனுப்பியது,அவரும் வந்தார் வந்தவர் நிதானமாக செயல்பட்டார்

நிலமையினை புரிந்து கொண்டு பக்தவத்சலத்தை சந்தித்தார், முதலில் கடுமையாக இருந்த பக்தவத்சலத்தை நேருவினை சந்தித்து பேசசெய்தார், தமிழக தென்முனையில் எழுந்த சிக்கலை தேசிய வாதமாக்கி நேருவுக்கு நெருக்கடி கொடுத்தார்

விவேகானந்தருக்கு மண்டபம் வேண்டாம் என நேருவால் சொல்லவே முடியாது காரணம் விவேகானந்தர் எனும் மகானின் பிம்பம் அப்படி, நேருவும் பணிந்தார்

அவர் பணிந்ததால் பக்தவச்சலமும் பணிந்தார் ஆனால் எல்லா தரப்பும் ஒத்துழைத்து அமைதியாக ஒப்புகொண்டால் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை எனவும் சொல்லிகொண்டார்

அடுத்த சிக்கல் மத்திய அமைச்சர் ஹிமாயுன் உருவில் வந்தது, காங்கிரஸ் அமைச்சரான அவர் அப்பாறையில் மண்டபம் வந்தால் சுற்றுசூழல் கெடும் விவேகானந்தர் மண்டபத்தை அனுமதிக்கமுடியாது என்றார்.

காங்கிரஸின் சிறுபான்மை அமைச்சர்களெல்லாம் இப்படி பேசாவிட்டால்தான் ஆச்சரியம் அவரும் பேசினார்

அந்த அமைச்சரின் சொந்த தொகுதி வங்காளம் என்பதை கவனித்த ராணடே வங்க மக்களிடையே சென்று பேசினார்

வங்கத்தின் தங்கமகனுக்கு குமரியில் மண்டபம் வைக்க ஹிமாயுன் மறுக்கின்றார் இது நியாயமா? என கேட்டார், வங்கம் அமைச்சரை நோக்கி பொங்க அமைச்சர் ஹுமாயுன் பல்டி அடித்து அனுமதி கொடுத்தார்

ராண்டே அதன்பின்னும் சாதுர்யம் செய்தார், விவேகானந்தர் இல்லம் அமைக்கும் குழுவில் இந்துக்கள், ஆர்.எஸ்.எஸ் தவிர எல்லா மத மக்களையும் சேர்த்தார். குறிப்பாக திமுகவின் அண்ணாதுரையினை அவர் சேர்த்தது மாபெரும் சாதனை

திமுக எப்பொழுதும் இந்துக்களின் மூடபழக்கத்தை, சாதியினை சாடும். விவேகானந்தர் போன்ற துறவிகளை அது மறுக்காது, நல்ல இந்து விவேகானந்தர் போன்று இருக்கவேண்டும் என அடிக்கடி அண்ணாவும் கருணாநிதியும் முன்பே சொல்லிகொண்டிருந்தார்கள்

அவர்கள் வார்த்தைகளை வைத்து அவர்களையே வளைத்ததில் அண்ணாவுக்கும் வேறு வழி இல்லை

அப்படி எல்லா தரப்பும் விவேகானந்தர் மண்டப குழுவில் வந்தபின், நாடு முழுக்க கையெழுத்து திரட்டினார். பல கோடிபேர் கையெழுத்திட்டனர். நாட்டு அம்மக்களின் அபிமானம் இது என அவர் அரசிடம் சொன்னபின் அரசுகளுக்கு தயக்கமில்லை

அதன் பின் மகா அட்டகாசமான திட்டத்தை செயல்படுத்தினா ராண்டே, ஆம் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என எல்லோரிடமும் நிதி திரட்டினார். “பணம் சிக்கல் இல்லை, 50 பைசா கொடுத்தாலும் அவர்கள் பங்களிப்பு உண்டல்லவா? அதுதான் நமக்கு வேண்டும்” என்றார்

உண்மையில் தேசமெங்கும் கிறிஸ்தவர்களும் அள்ளி கொடுத்தனர், விவேகானந்தரை தேசிய அடையாளமாக கருதினர். கிறிஸ்தவர்கள் நன்கொடையினை பல இடங்களில் ராணடே பெற்றபின் குமரிமாவட்ட கிறிஸ்தவ கொந்தளிப்பு அடங்க தொடங்கியது

எல்லா மதத்தாரும், இந்தியாவின் எல்லா மாநிலத்தாரும் இணைந்து அல்லது ராணடேவால் ஒற்றுமையாக கொண்டுவரபட்டபின்பே குமரியில் அம்மண்டபம் எழுந்தது

அம்மண்டபத்தை பார்க்கும்பொழுதெல்லாம் அந்த ராணடே எனும் மாமனிதன் நினைவுக்கு வருவார். இந்து விவேகானந்தர் எனும் அடையாளத்தை இந்த பாரதத்தின் பெருமகன் என்ற அடையாளமாய் மாற்றி அச்சாதனையினை செய்தார் ராணடே

அவர் பட்ட சிரமமும் கொஞ்சமல்ல, தெருவில் உறங்கினார், பல இடங்களில் பட்டினி கிடந்தார், நாடெல்லாம் பரதேசி போல் அலைந்து திரிந்தார், யாரிடமெல்லாமோ கெஞ்சினார் அவமானபட்டார்

இன்னும் எத்தனையோ பெரும் சிரமத்தை கடந்துதான் அந்த மண்டபத்தை கட்டி காட்டினார்

பெரும் கலவர சூழலை தடுத்து, ஒரு துளி ரத்தமின்றி, வன்முறையின்றி மிக சாதுர்யமாக எல்லா மக்களையும் அணைத்து சென்று அந்த மண்டபத்தை அமைத்த அந்த ராணடே நிச்சயம் வரலாற்றில் நிற்கின்றார், மண்டபம் இருக்கும் அளவும் அவர் பெயரும் இருக்கும்.

அவர் மட்டும் கொஞ்சம் சறுக்கி இருந்தால் குமரி, கேரளம், மிசோரம், நாகலாந்து என கிறிஸ்தவர் வாழும் பகுதி எல்லாம் ரணகளம் ஆகியிருக்கும், மாபெரும் ரத்த ஆறு மதத்தின் பெயரால் ஓடியிருக்கும்

அதனை காத்து, அப்பாறை ஸ்ரீபாத பாறையே அதில் கிறிஸ்தவருக்கு உரிமை இல்லை என்பதை நிறுவி, அதிலும் மொத்த இந்திய மக்களின் அபிமானத்தோடும், அவர்களின் நன்கொடையோடும் அம்மண்டபத்தை அமைதியாக கட்டி காரணமான அந்த ராணடே போன்ற நல்ல மனிதர்களை உருவாக்கியதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு

மாபெரும் சிக்கலை அந்த ஆர்.எஸ்.எஸ் ராணடே மிக திறமையாக அதை சமாளித்தார், அவர் மட்டும் சறுக்கி இருந்தால் இருந்திருந்தால் இந்திய பெருங்கடல் சிகப்பு நிறமாக மாறியிருக்கும்

ஆர்.எஸ்.எஸ் நாட்டுபற்று மட்டும் கொண்ட இயக்கம், கலாச்சாரத்தை காக்கும் அமைப்பு அங்கு நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்குமே வழி உண்டே தவிர வன்முறையோ சர்ச்சையோ அதன் நோக்கமில்லை என்பதற்கு அது உருவாக்கிய ராணடே பெரும் எடுத்துகாட்டு

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பது போல ஆர்.எஸ்.எஸ் எனும் தேசபற்று மிக்க இயக்கத்துக்கு அவர் ஒருவரே பெரும் உதாரணம்

இன்று அந்த மாமனிதர் நினைவுநாள், விவேகானந்தர் பாறை மண்டபம் குமரியில் இருக்குமளவும் அவர் பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும்

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

விரைவில் கன்னியாகுமரி கடற்கரைக்கும் அந்த பாறைக்கும் நடைபாலம் கட்டபடும் காலம் வரும், அப்பொழுது அவருக்கும் பாதையின் முகப்பில் ஒரு சிலை வைக்க வேண்டும், அது நிச்சயம் நடக்கும், காலம் அந்த பெருமனிதனுக்குரிய மரியாதையினை சரியாக செய்யும்