ஏசியான் நாடுகளின் கூட்டத்திற்காக பிலிப்பைன்ஸ் செல்கின்றார் மோடி
ஏசியான் நாடுகளின் கூட்டத்திற்காக பிலிப்பைன்ஸ் செல்கின்றார் மோடி
உலகில் ஏகபட்ட அமைப்புகள் உண்டு, சில காரணங்களுக்காக பல நாடுகள் சேர்ந்து தங்களுக்கொரு அமைப்பினை ஏற்படுத்திகொள்ளும்
அப்படி மியன்பார், தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், கம்போடியா,லாவோஸ், இந்தோனேசியா, மலேசியா, புருனெ, சிங்கப்பூர் அடங்கிய தென்கிழக்கு நாடுகளின் அமைப்பு ஆசியான்
Association of South East Asian Nations
அக்காலத்தில் இப்பகுதியில் கம்யூனிசம் நுழைந்துவிட கூடாது எனும் நோக்கிலும், உலகில் நாங்கள் அமைதிவிரும்பிகள் அணிசேரமாட்டோம் என்ற நோக்கிலும் அமைக்கபட்ட அமைப்பு இது
அவர்களுக்குள் பொருளாதார ஒத்துழைப்பும் உண்டு. புருனே, மலேசியா போன்ற எண்ணெய் வளநாடுகள், சிங்கப்பூர் போன்ற சந்தைவளம் இருப்பதால் உலகின் கவனம்பெறும் பகுதி இது
இதன் பொன்விழா கொண்டாடபடுகின்றது,
இதற்கு டிரம்பும் வந்திருக்கின்றார், நமது மோடியும் சென்றிருக்கின்றார்
ஆசியான் நாடுகளுடன் நல்ல ஒத்துழைப்பினை ஏற்படுத்தி இந்திய வளர்ச்சிக்கு வசதி ஏற்படுத்த மோடி முயற்சிப்பார் என எதிர்பார்க்கபடுகின்றது.
மோடி மிக சிறப்பாக செயல்படுகின்றார் என டிரம்ப் பாராட்டியபின் இருவரும் சந்திக்கும் சந்திப்பு இது
ஒரு விஷயம் ஒப்புகொள்ள வேண்டும்
உள்நாட்டில் சில சர்ச்சைகள் இருந்தாலும் வெளிநாடுகளை பொறுத்தவரை கருப்புபண நடவடிக்கை நல்லது என்றும், அது பலனழிக்க ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்றுமே சொல்கின்றன
அதாவது நோயுற்ற ஒருவனுக்கு அறுவை சிகிச்சை செய்யும்பொழுது அவன் கொஞ்சநாள் கழித்த்து நலமாக திரும்புவான் அல்லவா அப்படி
மோடியின் நடவடிக்கைகள் அந்த ரகம், கொஞ்ச நாளுக்கு பின் முறையான வளர்ச்சி பெருகும் என உலகம் நம்புகின்றது
மோடியின் பயணம் வெற்றியாக அமைய வாழ்த்துக்க்கள்
(இந்த ஆசியான் நாடுகள் எல்லாம் முன்பு சோழ, பல்லவ மன்னர்களால் ஆளபட்டவை, கொஞ்சம் பாண்டிய பகுதிகளும் உண்டு
நாளை நாம் தமிழர் ஆட்சி நடக்கும்பொழுது இந்த ஏசியான் எல்லாம் தும்பி படையினரால் கைபற்றபட்டு புலிகொடி பறக்கவிட பட்டு ஆளப்படும் என ஒரு கூட்டம் நம்பிகொண்டிருக்கின்றது)