ஏண்டா உன்னை டெங்கு கொசு கட்டிக்கல‌?

அடிக்கடி நம்மை கண்காணித்து கொண்டும் அடிக்கடி கேள்விகள் கேட்டும் கொண்டிருந்த அந்த தும்பிகளில் ஒன்று சீறியது

“அண்ணே, கட்டபொம்மன் வழிப்பறி வந்தேறி கொள்ளைக்காரன், அவன பத்தி எழுதினது தப்புண்ணே

அப்படியா? அவர் எங்கே கொள்ளையடித்தான்

அண்ணே திருவைகுண்டம் நெல்குடோனை எல்லாம் கொள்ளையடித்தான், கொள்ளக்கார பய அதான் வெள்ளையன் தூக்குல போட்டான்

ஏண்டா திருவைகுண்டம் லண்டனிலா இருக்கு?

இல்லண்ணே நம்ம நெல்லை பக்கம்

அத கொள்ளையடிச்சி யாருக்கு கொடுத்தான்

நம்ம பாஞ்சாலகுறிச்சி மக்களுக்குண்ணே

கட்டபொம்மன் அடிச்சது கொள்ளைண்ணா ஈழத்துல பிரபாகரன் எத்தனை வங்கிய கொள்ளையடிச்சான்? அதெல்லாம் என்ன?

அண்ணே அது போராட்டம்

ஓஓ பிரபாகரன் பேங்க்ல அடிச்சா அது போராட்டம், கட்டபொம்மன் நெல்குடோன அடிச்சா அது வழிப்பறியா

அண்ணே பாஞ்சாலங்குறிச்சி எங்க இருக்கு, திருவைகுண்டம் எங்க இருக்கு? அவன் அவ்வளவு தூரம் வந்து கொள்ளையடிச்சிருக்காம்ணே

சரி பாஞ்சாலங்குறிச்சி திருவைகுண்டம் எவ்வளவு தூரம்?

செக் பண்ணி சொல்றேண்ணே

அட பன்னாட, பாஞ்சாலங்குறிச்சி எங்க இருக்குண்ணு தெரியாமலே கத்துறியா?

ஹிஹிஹி அண்ணே டெங்குல கொஞ்சம் பிசிண்ணே அதான் சரியா படிக்கல‌

நீங்க யாருமே 10ம் கிளாஸ் தாண்டதவனுக, நீங்க ஏண்டா பிசி?

அண்ணே டெங்குக்கு நிலவேம்பு கஷாயம் குடுக்குறோம்ணே, தமிழ் மருந்து

யாருக்கெல்லாம் குடுக்குறீங்க?

டெங்கு பாதிச்ச தமிழர்களுக்குண்ணே, தமிழன நாம தாம்ணே காப்பாத்தணும்

அப்போ இங்கு இருக்கும் தெலுங்கு பேசும் மக்களுக்கு கொடுக்க மாட்டீர்களா?

அது கொள்கைக்கு முரண் அண்ணே, நாம் தமிழர், நிலவேம்பு தமிழர் மருந்து அத நாங்க தமிழருக்கு மட்டும்தான் கொடுப்போம்

சரி உங்க அண்ணே எங்க இருக்கான்?

ஒருத்தன் துபாய்ல, ஒருத்தன் பெங்களூர்ல‌

துபாய்ல உங்க அண்ணன் தீயில சிக்கிட்டா, துபாய்க்காரன் உங்க அண்ணன விட்டுட்டு அடுத்தவன காப்பாத்துனா என்ன சொல்லுவா?

அண்ணே அப்படி எல்லாம் நடக்காதுண்ணே, துபாய் கவர்ர்மெண்ட் நல்ல கவர்மெண்டுண்ணே

உங்க பெங்களூர் அண்ணன, பெங்களூர் ஆஸ்பத்திரில ஒதுக்கி வச்சிட்டா என்ன செய்வ?

அண்ணே அப்படி எல்லாம் செய்யமாட்டாங்க, அங்கெல்லாம் சூப்பரா கவனிப்பாங்களாம்

ஆக நீங்க ஊரெல்லாம் போன உங்கள கவனிக்கனும், இங்க இருக்கிறவங்களுக்கு நீங்க கசாயம் கொடுக்க மாட்டீங்க‌

அது..ம்ம்.. எண்ண பண்றதுண்ணே கொள்கைண்ணு ஒண்ணு இருக்குல்ல‌

இந்த சென்னை வெள்ளத்துல படகு கட்டி விளையாங்களே, அப்பவும் தமிழனை மட்டும்தான் தேடி காப்பாத்துனீங்களா

அண்ணே நாங்க படகு கட்றதுக்குள வெள்ளம் வத்திடுச்சிண்ணே

வெள்ளம் வத்தின பிறகுதானடா நீங்க படகே விட்டீங்க? சென்னையில வெள்ளம்ணதும் ஆந்திராகாரன் எப்படி ஓடிவந்தாண்ணு மறந்துட்டா?

அண்ணே அது பழையகதை, இப்போ டெங்குக்கு வாங்கண்ணே

உன்னையெல்லாம் ஏண்டா டெங்கு கொசு கட்டிக்கல‌

தெரியலண்ணே கொஞ்சம் பயமாத்தான் இருக்கு

நீ எல்லாம் சாக மாட்டேடா , உங்களை எல்லாம் தம்பிண்ணு வச்சிருக்கான் பாரு உன் தலைவன் அவன் உங்கள நினைச்சே செத்துருவாண்டா”


தமிழகம் முழுக்க அம்மா திரையரங்குகள் அமைக்கபடும் : கடம்பூர் ராஜூ

இந்த டெங்குவால் செத்தவர்களுக்காக அம்மா சுடுகாடு அமைக்கபடுமா அய்யா?