ஏன் அப்படி இருந்தார்கள்?

இந்திய ராணுவம் குறிப்பாக அந்த விமானபடையின் நிலமையினை பார்த்தால் ஒன்று புரிகின்றது

இந்த மன்மோகன்சிங் அரசு பெரும்பாலும் புதிய விமானங்களை வாங்கவோ அதை பலபடுத்தவோ கொஞ்சமும் அக்கறைகாட்டவில்லை

2006களிலே நவீன விமானங்களை வாங்க வேண்டியவர்கள் அமைதி காத்திருக்கின்றார்கள், விமானபடை புத்தாக்கம் தள்ளிபோடபட்டிருக்கின்றது

(இதே காலகட்டத்தில் அதாவது காங்கிரஸ் அரசின் காலகட்டத்தில் இந்தியராணுவத்துக்குள்ளே சில முணுமுணுப்புகள் வந்தது நிஜம் )

இந்திய விமானபடை இடைவிடாமல் வைத்த கோரிக்கைபடி கடைசியில் ரபேலை வாங்குவோம் என்றவர்கள் அதையும் இழுத்தடித்து ஆட்சியும் இழந்து சென்றுவிட்டார்கள்

இந்திய விமானடை அதன்பின் மோடிஅரசுக்கு கோரிக்கை வைத்தது, மோடி அரசு முடிந்ததை செய்தது

அதிலும் ரபேல் ஊழல் என சொல்லி முடக்கியது காங்கிரஸ்

ஆனாலும் பல காரியங்களை விமானபடைக்கு செய்திருக்கின்றது மோடி அரசு

ஒன்று நினைவில் கொள்ள வேண்டும், போர் விமானத்தை நினைத்தவுடன் சந்தையில் கத்திரிக்காய் வாங்குவது போல வாங்கமுடியாது, ஒப்பந்தம் எல்லாம் முடிந்து சில காலம் ஆகும்

ரபேல்தான் வாங்க வேண்டும் என ஒற்றைகாலில் நிற்கின்றது விமானபடை அவர்களின் விருப்ப தேர்வு அது

அது வர கொஞ்சம் தாமதமாகும் என்கின்றார்கள், இது போக பல ரகசிய தேர்வுகளுக்கும் மோடி அரசு செவிசாய்த்திருக்கின்றது

மன்மோகன்சிங்கின் அரசின் அமைதியால் இந்திய விமானபடை கொஞ்சம் வலுவிழக்கின்றது, இந்த சின்ன சண்டையில் மிக் ரக விமானத்தை இயக்கியதே சாட்சி

இதனால் விமானம் பழையதாக இருக்கட்டும், புதிய விமானம் வரும்வரை நவீன ஏவுகனைகளை பொருத்தி ஓரளவு தாக்குபிடிக்கின்றது இந்திய விமானபடை

அவசர தேவைக்கு அதைத்தான் செய்ய முடியும்

நிச்சயமாக சொல்லலாம் 2006களிலே மன்மோகன் சிங் அரசு விமானபடையின் கோரிக்கைக்கு செவிசாய்த்திருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது

மோடி அரசு இப்பொழுது செய்திருக்கும் காரியம் இன்னும் சில ஆண்டுகளில் தெரியும், நிச்சயம் நல்ல விஷயம்

ஆம் எப்21 ரக விமானம் உட்பட பல விமானங்களை வாங்க இந்த அரசு ஒப்பந்தம் செய்திருக்கின்றது

அமெரிக்க போர் விமானங்களை இந்தியா வாங்குவது இதுதான் முதல்முறை

ஆனால் மறுபடியும் குழப்பமான அரசு வந்தால் மறுபடியும் சிக்கல்

பாதுகாப்பு விவகாரங்களில் மன்மோகன்சிங் அரசு மெத்தனமாகவே இருந்திருக்கின்றது

மெத்தனமாக இருந்து தொலைத்தவர்கள் பின் ரபேல் இந்தியா வரும்பொழுது ஏன் ஊழல் என குதித்தார்கள்?

ஆம் காங்கிரஸ் தெரிந்தே துரோகம் செய்திருக்கின்றது, ரபேல் இங்கு விரைந்து வர அக்கட்சி உதவியிருக்க வேண்டும்

ஆனால் விமானபடையின் அவசர கோரிக்கை தெரிந்தும் இவர்கள் ரபேலுக்காக பாராளுமன்றத்தை முடக்கினார்கள் என்றால் இவர்கள் மேல் அச்சமே மேலோங்குகின்றது

கவனியுங்கள், காங்கிரஸ் காலத்தில் ரபேல் வேண்டும் என கதறுகின்றது விமானபடை, அதை வாங்கி கொடுக்க வேண்டிய காங்கிரஸ் இழுத்தடிக்கின்றது

பின்பு அது பாஜக காலத்தில் வரும்பொழுதும் குழப்பம் விளைவித்தால் எப்படி? ஏதோ இடிக்கின்றது அல்லவா?

ஏன் அப்படி இருந்தார்கள்?

ஏதோ ஒரு சக்தி நம்மை காக்கும் என நம்பியிருக்கலாம், விமானபடை கோரிக்கையினையும் மீறி ரபேலுக்கு பதில் இன்னொரு நாட்டு பக்கம் சரிந்திருக்கலாம்

அப்படியானால் அந்த சக்திக்கு இந்நாட்டில் என்னென்ன கதவுகளை திறந்துவிட்டார்களோ யாருக்கு தெரியும்?

(இந்திய விமானபடை தனக்கு தேவையானதை அரசுக்கு கோரிக்கையாக வைக்கும் அவர்கள் தனியாக வாங்கமுடியாது

ரபேலுக்கு அன்றே அவர்கள் கோரிக்கை வைத்தார்கள் அது இன்னும் வந்து சேரவில்லை

ஏன் இன்னும் வரவில்லை ஏன் சிலர் வந்துசேர விடவில்லை என சிந்தியுங்கள் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்..)