ஏன் ஏவுகனைகள் வீசபடவில்லை?

இந்தியா ஏன் பாகிஸ்தான் மேல் ஏவுகனையினை ஏவவில்லை, எதற்கு விமானதாக்குதல் என்றேல்லாம் ஏக கேள்விகள், கேட்பது யாரென்றால் திமுகவினர்

அவர்களுக்கு ஒரே நோக்கம் செத்துபோன தீவிரவாதிகள் வந்து இந்திய ராணுவம் எங்களை கொல்லவில்லை மோடி ஒழிக என சொல்வது வேறொன்றுமில்லை

ஏன் ஏவுகனைகள் வீசபடவில்லை?

ஏவுகனைகள் பல நேரங்களில் குறிப்பிட்ட இலக்கினை தாக்காதவை, பின்லேடனை குறிவைத்து அமெரிக்கா 19996ல் வீசிய ஏவுகனைகள் ஆப்கனில் இலக்குமாறின அவன் தப்பினான்

இதனால்தான் 2011ல் பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் சகிதம் இறங்கி அவனை ஒழித்தது அமெரிக்கா

இந்த தாக்குதல் துல்லிய‌ தாக்குதல் அதுவும் மலைசரிவு பகுதிகள், அங்கு ஏவுகனை சரிவராது என்பதால் இந்திய ராணுவம் மிராஜ் விமானங்களை அனுப்பியது

இன்னொரு கேள்வியும் கேட்கின்றார்கள் அதுதான் ஆபத்து

ஜெய்ஸ் இ முகமது தலைவன் மசூத் அசாரை கொல்லாமல் ஏன் பயிற்சி தீவிரவாதிகளை கொன்றார்கள்?

தலைவனின் இடத்தை அறிதல் கடினம், ஆனானபட்ட இஸ்ரேலே நஸ்ருல்லா எனும் ஹிஸ்புல்லா இயக்க தலைவன் இடம் தெரியாமல் அல்லாடுகின்றது

அம்மாதிரியான தலைவர்களுக்கு நிரந்தர வசிப்பிடம் என எதுவும் கிடையாது

கோபாலபுரம் வேளச்சேரி போல நிரந்தர முகவரி அவர்களுக்கு கிடையாது

இந்த முகாமில் இருந்த‌ தீவிரவாதிகள் நிச்சயம் பயிற்சி முடிந்தவுடன் காஷ்மீருக்குள்தான் வருவார்கள் என்பதால் மொத்தமாக முடித்தது இந்தியா

திமுகவினரின் வருத்தம் என்ன தெரியுமா?

தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஏவுகனையின்றி விமான குண்டுகளால் தகர்க்கபட்டதும் அதில் பயிற்சி தீவிரவாதிகள் கொல்லபட்டதுமாம்