ஏமாந்துபோக கலைஞர் என்ன அத்வாணியா?


ஒரு சிலருக்கு விதி வேறு மாதிரி அமைந்துவிடுகின்றது
அதாகபட்டது விழுந்து விழுந்து உழைப்பார்கள், ஆனால் பலனை இன்னொருவர் அனுபவத்துகொண்டிருப்பார், சிலருக்கு அனுபவிக்கும் யோகமே இருக்காது
வரலாற்றில் உதாரணம் உண்டு
பைபிளில் படாதபாடுபட்டு மோசே என்பவன் எகிப்தில் இருந்து இஸ்ரேலிய மக்களை வழிநடத்தி இன்றிருக்கும் இஸ்ரேலுக்கு கொண்டு சேர்த்தான்,
ஆனால் அவனுக்கோ இஸ்ரேலில் கால் வைக்கும் பாக்கியம் இல்லை. ஆனால் அவனே மூலம்
மாவீரன் அலெக்ஸாண்டர் 20 வருடமாக போராடி அமைத்த பரந்த சாம்ராஜ்யத்தை அவனின் அற்பஆயுசுக்கு பின் நண்பர்கள் அதிகாரம் செலுத்தினர்.
சிம்பொனி பிதாமகனான பீத்தோவானுக்கு தன் இசையினை தானே கேட்காத அளவிற்கு காது செவிடானது
தாஜ்மஹாலை ஆசை ஆசையாக கட்டிய ஷாஜகான் பின்னாளில் அதனுள் நுழையாதபடி ஒரு சிறையிலே முடக்கபட்டான்
திராவிட நாடு அமைப்பேன் என களமிறங்கி துண்டு வீசிய அண்ணா, கட்சி வளர்த்த அண்ணா ஆட்சிக்கு வந்ததும் செத்தார்.
பின் அக்கட்சி யாருக்கு பயன்படுகின்றது என்பது கோபாலபுரமும், போயஸ்கார்டனும் சொல்லவேண்டிய வரலாறு, பன்னீர் செல்வமும் மகா பெரும் எடுத்துகாட்டு.
உயிரைகொடுத்து பல தியாகம் செய்து இயக்கம் வளர்த்தனர் புலிகள், ஆனால் தமிழகத்தில் அதனால் எத்தனைபேர் சம்பாதித்தார்கள், சம்பாதித்துகொண்டிருக்கின்றார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
கால்நடையாக நடந்து இந்து மதத்தினை வளர்த்து சங்கர மடங்களை அமைத்தார் ஆதி சங்கரர்ரா, இன்று அவை யாரால் அனுபவிக்கபடுகின்றன என்பது காஞ்சிபுரம் செய்தி
பசியோடும் தாகத்தோடும் சிலுவையில் நிர்வாணமாக செத்துகிடந்தார் இயேசுநாதர், இன்று பகட்டாக உடை உடுத்தி, வித விதமாக தின்று தீர்க்கும் பென்ஸ் கார் கிறிஸ்தவ போதகர்களின் உல்லாச நிலை உலகறியும், தமிழகத்தில் நன்றாகவே தெரியும்
இயற்கையின் விசித்திரம் இது, எங்கோ மலையில் மழைபெய்ய எங்கோ யாரோ பயன்படுத்திகொண்டிருப்பார்கள் அல்லவா?
அப்படி பல விஷயங்கள் புரியாத உலகமிது.
சரி இப்பொழுது இந்த கதை எல்லாம் எதற்காக?
ஜனசங்கமாக இருந்த ஒரு இயக்கத்தை கட்சியாக மாற்றி உயிருக்கு அஞ்சாமல் இந்தியா எங்கும் சுற்றி அலைந்து அதனை வளர்த்து, ராம் ஜென்ம பூமி என பெரும் சர்ச்சையினை வளர்த்து, மசூதியினை இடிக்க காரணமாகி, அது பின் கொள்கை, கட்சி, நாட்டுபற்று, வோட்டு என மாற காரணமாக இருந்தவர் அவர்
லால் கிருஷ்ண அத்வாணி சுருக்கமாக எல்.கே அத்வாணி
அக்கட்சியின் தூண், அஸ்திவாரம் எல்லாம் அவரே, முதலில் ஆட்சிக்கு வரும்பொழுது பிரதமராகும் வாய்ப்பும் அவருக்கே, ஆனால் கூட்டணி ஆட்சி குழப்பம் என எப்படியோ அது கிடைக்காமல் போனது, அத்வாணியினை கூட்டணியினர் யாரும் ஏற்கவில்லை
அதன் பின் எதிர்கட்சி தலைவராக பின்னாளில் அவர்தான் போராடினார், கடுமையான யுத்திகள், உயிருக்கு அஞ்சா தன்மை
கடந்த தேர்தலில் பெரும்பான்மையாக பாஜ ஆட்சி அமைக்கும் பொழ்து நிச்சயம் அவர்தான் அமர்ந்திருக்கவேண்டும், ஆனால் விதி??
அத்வாணி ஓரம்கட்டபட்டார், வாஜ்பாய் ரிட்டயர்டாக்கபட்டார்.
அப்படி இல்லை என்றாலும் பலமான பிரமோத் மகாஜன் இருந்திருந்தால் நிச்சயம் மோடி வந்திருக்க முடியாது, மகாஜனும் கொல்லபட்டார்.
இதன்பின் ஜோஷி, சுஷ்மா என அகில இந்திய வரிசை இருந்தது. ஆனால் சடாரென மோடி பிரதமாரானது எப்படி?
இவை எல்லாம் கூட்டி கழித்து பெருக்கி வகுத்து இன்னும் திரிகோணவியல், டிபரன்சியல் கால்குலஸ் வரை செய்து பார்த்தால்….
மோடி குஜராத்திய தொழிலதிபர்களால் எவ்வளவு கவனமாக பிரதமராக்கபட்டிருக்கின்றார் என்பது புரியும், இது மகா மர்மம் அடங்கியது
கட்சியின் பெரும் அடையாளம் எனும் வகையில் அத்வாணியே முன்னிறுத்தபட்டு பிரதமாயிருக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லையே எப்படி?
இதுதான் மீடியா சதி, பிரச்சார உத்தி. மோடி பெரும் பொருளாதார புலி போலவும், இரண்டாம் சதாம் உசேன் போலவும் திட்டமிட்டு பெரும் காலம் எடுத்து செய்யபட்ட வியூகம், விளைவு அத்வாணி ஓரம்கட்டபட்டு இன்று காணாமலே போய்விட்டார்.
இதற்கு அத்வாணி என்ன செய்திருக்கவேண்டும்?
மாறன் என் மனசாட்சி என கலைஞர் மாறனை உயர்த்திவிட்ட வேளையில் பின்னாளில் மாறன் மகன்கள் கலைஞருக்கு எதிராக சில காரியங்களில் ஈடுபடும் பொழுது கலைஞர் என்ன செய்தார் என பார்த்து பாடம் படித்திருக்கவேண்டும் அல்லது வந்து ஆலோசனை கேட்டிருக்கலாம்
எப்படி போதித்து அத்வாணியினை காப்பாற்றி இருப்பார் கலைஞர்? , அத்வானி விதி தடுத்துவிட்டது.
தொழிலதிபர்கள் எப்படி திட்டமிட்டு அரசியலில் கைப்பாவைகளை உருவாக்குவார்கள் என்பதற்கு அமெரிக்க அரசியலில் புஷ், டிரம்ப் குடும்பங்களே சாட்சி, இந்தியாவில் நிச்சயம் மோடியே சாட்சி
அத்வாணி போல கலைஞரும் அசால்ட்டாக இருந்தால் என்னாயிருகும்? நிச்சயம் சில தொழிலதிபர்கள் யாரையோ முன்னிறுத்தி திமுகவினை கைபற்றி இருக்கலாம்
கலைஞர் அத்வாணி போல பிறந்தநாளில் மட்டும் நினைவு கூறபடுவார்.
கலைஞர் இன்றளவும் கட்சியினை விரல்நுனியில் வைத்திருக்கின்றார் என்றால் இதுதான், இந்த விழிப்புதான்
காமராஜரை தோற்கடித்த சீனிவாசன் ஒரு ரேடியோ பேட்டிக்கு செல்லும்பொழுதே ஓடி சென்று தடுத்து, அம்பு நீ, எய்தவன் நான் பேசாமல் சென்றுவிடு என சொன்ன சாமார்த்தியசாலி அவர்.
அதாவது காமராஜரை எதிர்த்தவன் என சீனிவாசன் வளர்ந்துவிட கூடாது எனும் பெரும் தந்திரம், பின்னாளில் அந்த சீனிவாசன் என்ன ஆனார்? காணமலே போனார்
எது? எப்பொழுது? எப்படி? என்று? சிக்கலாகும் என முன்கூட்டியே உணரும் திறன் அவருடையது.
ஆக அகில உலக அரசியல் வாதிகளே, அரசியலில் உங்கள் இடம், உங்களால் வளர்க்கபட்ட கட்சி காலமுழுவதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமென்றால், மானம் வெட்கம் பார்க்காமல் கலைஞர் காலில் விழுந்து பாடம் படித்துகொள்ளுங்கள்
இல்லை என்றால் என்னாகும் என்பதற்கு அத்வாணியினை பார்த்து விபரீதத்தை தவிர்த்துகொள்ளுங்கள்
பார்ப்பனனுக்கும் அரசியல் சாணக்கியம் போதிக்கும் ஒரே சூத்திரன் கலைஞர் மட்டுமே.
அத்வாணி பிறந்தநாள் அந்த தத்துவத்தைத்தான் பாரத தேசத்திற்கு சொல்கின்றது
கலைஞரா கொக்கா? என சொல்லாமல் இனி இப்படி சொல்லலாம்
ஏமாந்துபோக கலைஞர் என்ன அத்வாணியா?
கொசுறு
கருத்துக்களை சொல்லும் போது கவனம் தேவை! குஷ்புவுக்கு திருநாவுக்கரசர் அறிவுரை!
அவ்வளவு துணிச்சலாக ஒரு பெண் தன் கருத்துக்களை சொல்கின்றார், அவருக்கு இவர் அறிவுரை சொல்கின்றாராம்.
அடிக்கடி குஷ்பூனினையே இம்மனிதர் குறிவைத்து கருத்து தெரிவிக்கும் மர்ம்ம என்ன?
ஒன்றுமில்லை இதுதான்
இந்த திருநாவுக்கரசர் அன்றொருநாள் ஜெயலலிதாவால் அதிமுகவிலிருந்து ஓட அடிக்கபட்டவர்,
கொஞ்சநாள் ஒரு கட்சி நடத்தினார், அதில் இவர் மட்டும்தான் இருந்தார், அவரோடு அவரின் கூலிங்க் கிளாஸ் மட்டுமே இருந்தது.
அதன் பின் வனவாசம், பாஜகவில் அஞ்ஞான வாசம் எல்லாம் முடிந்து இப்பொழுது காங்கிரசில் இளைப்பாறிகொண்டிருக்கின்றார்.
அந்த அனுபவத்தில் குஷ்பூவும் பின்னாளில் தன்னை விரட்டிவிடுவாரோ எனும் அச்சத்தில் மனிதர் உளறிகொண்டிருக்கின்றார்.
இப்படி அறிவுரை கூறுவதற்கு பதிலாக, குஷ்பூவிடம் தோற்றுவிடுவேனோ என அச்சமாக இருக்கின்றது என அவர் பகிரங்கராக ஒப்புகொள்ளலாம்.
இதில் குஷ்பூவிற்கு அல்ல, நிச்சயமாக திருநாவுக்கரசருக்குத்தான் கவனம் தேவை.
இன்னும் குஷ்பூவினை குறிவைத்து பேசியே தமிழக காங்கிரசை வளர்க்கமுடியும் என நம்பினார் என்றால்…..
இப்போது மூச்சுவாங்க ஆசுவாசமாக அமர்ந்திருக்கும் இந்த திண்ணைக்கும் ஆபத்து