ஏம்மா தமிழிசை, நீர் ஒரு மருத்துவர் அல்லவா?

ஒருவழியாக தமிழகத்திற்கு கவர்ணரை நியமித்துவிட்டார்கள், அந்த அதிமுக அரசினை நீட்டிக்கவா, இல்லை சனியனை விரட்டிவிட்டு கவர்ணர் ஆட்சியினை நிறுத்தவா என்பது இனிதான் தெரியும்.

இரண்டாவது விஷயத்திற்கு வாய்ப்புகள் அதிகம்..


ஏம்மா தமிழிசை, நீர் ஒரு மருத்துவர் அல்லவா?

எங்கே? ஜெயலலிதா பற்றி ஸ்டாலின் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த கேள்விகளை எல்லாம் தேசிய கட்சியான பாஜக கேட்டு சிபிஐக்கு விசாரணையிட்டால் எப்படி இருக்கும்? பாஜக மீது எவ்வளவு மரியாதை வந்திருக்கும்?

அப்படி செய்ய்யாமல் சும்மா மோடி, தாடி என சொல்லிகொண்டிருந்தால் தாமரை கடலடியில் கூட மலராது, காவி கொடி விவேகானந்தர் பாறை தவிர எங்கும் பறக்காது.

அரசியல் எப்படி செய்யவேண்டும் என திமுகவில் வந்து படித்துவிட்டு செல்லுங்கள், அனுமதி இலவசம்தான்

கொஞ்சநாள் அங்கு படித்துவிட்டு பின் அங்கு கட்சிபணி ஆற்ற செல்லுங்கள்.


ஐ.நா அலுவலகம் முன்னால் சிலம்பு கம்பு சுற்றி காட்டினார் வை.கோ

அந்த சிங்களர்கள் அடிக்க பாய்ந்ததிலிருந்து மனிதர் ஒரு மாதிரி ஆகிவிட்டார், அவர்களை மிரட்ட கம்பு சுற்றுகின்றாராம்

நாளை பிச்சுவா கத்தி, மான் கொம்பு என அடுத்த வித்தை இருக்கும்

சைக்கிள் செயின் சுற்றுதல், சோடா பாட்டில் எறிதல், நாட்டு வெடிகுண்டு வீசுதல் என அடுத்த ரவுண்டு நடந்தாலும் ஆச்சரியம் ஏதுமில்லை