ஏர் இந்தியாவினை தலைமுழுக இந்திய அரசு தயாராகின்றது

Image may contain: sky, aeroplane, cloud and outdoor

உலகெல்லாம் எல்லா தொழிலிலும் அரசியல் போலவே கடும் போட்டி ஏற்பட்டிருக்கின்றன, அதில் விமான போக்குவரத்தும் தப்பவில்லை

பட்ஜெட் விமானங்களின் வரவு பெரும் விமான நிறுவண சாம்ராஜ்யங்களையே அசைத்து பார்க்கின்றன, இன்றைய தேதியில் ஓரளவு நிலைத்து நிற்பவை அரபு நாட்டு விமான சேவைகள்

காரணம் எண்ணெய் பலம், அதுவும் இல்லை என்றால் அவர்களும் இல்லை

முன்பு இந்தியாவில் ஏர் இந்தியா மட்டும் இருந்தது, மகராஜா கம்பீரமாக வலம் வந்தார். பல விமானங்கள் குவிய மகராஜா தடுமாறினார்

உள்நாட்டில் ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ என்ற போட்டி ஒருபுறம், வெளிநாட்டுக்கு ஜெட் ஏர்வேஸ் , ஏர் ஏசியா , லயன் ஏர், சில்க் ஏர் இன்னும் ஏராள விமானங்கள் வந்து செல்ல ஏர் இநதியாவினை சீண்ட ஆளில்லை

இந்திய அரசுக்கும் அதனை மேம்படுத்தும் திட்டம் இல்லை, அது எதனைத்தான் கவனித்தது, இதற்கிடையே புளிசோறு வழங்குதல், எலி புகுந்து விளையாட விடுவது என ஏர் இந்தியாவும் தன் பெயரை கெடுத்துகொண்டது

விளைவு தள்ளாடும் ஏர் இந்தியாவினை தனியாருக்கு கொடுக்க அரசு இறங்கிவிட்டது, 76% பங்குகளை தனியாருக்கு கொடுக்குமாம்

கொடுப்பது சிக்கல் இல்லை, அவர்கள் சொல்லியிருக்கும் அறிவிப்புத்தான் சிக்கல்

அதாவது முன் அனுபவம் இல்லா கம்பெனிகளும் பங்கேற்கலாம் என்கின்றது அரசு, ஆம் புண்ணாக்கு வியாபாரி முதல் அம்பானி வரை யார் என்றாலும், ஏன் மூலக்கடை பழைய இரும்பு வியாபாரி வரை செல்லலாம், பேரீட்சம்பழம் விற்பவரும் செல்லலாம்

கேட்டால் அவர்கள் எந்த தொழிலும் செய்யட்டும், பங்கு வாங்கி ஏதும் செய்துவிட்டு போகின்றார்கள் என்கின்றது அரசு

ஆனால் இதே போல் யார் வேண்டுமானாலும் ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு வரலாம் என ராசா அறிவித்தபொழுது இதே பாஜக தான் பொங்கியது

அனுபவம் இல்லாதோரை எப்படி அழைக்க முடியும்? இது ஊழல் என கத்தியது அவர்கள்தான்

இன்று அவர்களேதான் ஏர் இந்தியா விவகாரத்தில் அனுபவம் இல்லாதோரை அழைக்கின்றார்கள்,

ராசா செய்தால் ஊழல், இவர்கள் செய்தால் அது தேச அபிமான செயல்

எப்படியோ ஏர் இந்தியாவினை தலைமுழுக இந்திய அரசு தயாராகின்றது என்பது புரிகின்றது