ஏழையாய் பிறந்துவிட்டால் எந்த பாதுகாப்பும் இந்நாட்டில் இல்லை…
அரிசி திருடினான் என்பதற்காக ஒரு கொடூர கும்பல் ஒரு ஏழையினை கொன்றதும் அக்கும்பலை பிடித்ததாக கேரள அரசு சொல்கின்றது
இங்கோ அந்த விதவை தாயின் மகன் கொல்லபட்டு, தாயின் கண்முன்னே அந்த சிறுமி அலங்கோலபடுத்தபட்ட மாபாதகமும் நடந்திருக்கின்றது
யாரை கைது செய்தார்கள்? யார் பிடிபட்டார்? அரசு என்ன நடவடிக்கை எடுத்தது
வேறு யார் செய்திருந்தாலும் குதிக்கும் விழுப்புரம் ஏரியா பாதுகாவலர் ராமதாஸ் இதில் சத்தமே இல்லை. ஆளும் கட்சி, எதிர்கட்சி, மய்யம், சுழியம், ஆன்மீகம், தமிழ்தேசியம் என எதுவும் கண்டுகொள்ளவில்லை
சொந்த மாநிலத்தில் கண்ணெதிரே நடந்திருக்கும் இந்த கொடுமையினை விட்டுவிட்டு கேரளாவில் அவன் செத்தான், உபியில் இவன் செத்தான், டெல்லியில் யாரோ செத்தார் என கண்டிப்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது
ஏழையாய் அதுவும் தாழ்த்தபட்ட சாதியின் ஏழையாய் பிறந்துவிட்டால் எந்த பாதுகாப்பும் இந்நாட்டில் இல்லை, அது ராமர் பூமியோ, ராமசாமி பூமியோ நிலமை இதுதான்