ஏ பிராமண சமூகமே ஒன்றுகேள்
தமிழகத்தில் பிராமணர்களின் வேலை வாய்பினை கெடுத்தவர் கலைஞர் என பல பிராமணர் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்
ஏ பிராமண சமூகமே ஒன்றுகேள்
இங்கு அரசுபணியிலிருந்து , ஆலயத்திலிருந்து உங்களை விரட்டாவிட்டால் என்ன ஆகியிருக்கும்?
இங்கே அரசு வேலை, ஆலயங்களில் மணி அடிக்கும் வேலை என இங்கே முடங்கி இருப்பீர்கள்
ஆனால் இங்கே சூழல் மாறியதால் இனி எதிர்காலம் இல்லை என ஓடினீர்கள், எங்கே ஓடினீர்கள்?
உலகெல்லாம் ஓடினீர்கள்
கூகுள் முதல் அமேசான் வரை உயர் பதவி அடைந்த்தீர்கள், இன்னும் ஐடி முதல் ராக்கெட் விஞ்ஞானம் வரை உலகபிரசித்தி பெற்ற கம்பெனிகளில் எல்லாம் உயர் பதவியில் இருக்கின்றீர்கள்.
எப்படி சாத்தியம்? இங்கே இருந்து உங்களை விரட்டி விட்டதால் சாத்தியம்
இங்கேயே விட்டிருந்தால் இன்று அண்ணாசாலை பக்கம் தலைவா என அழுதுகொண்டிருப்பீர்கள்
ஆக அந்த தலைவன் உங்களை விரட்டி இங்கு சம்பாதிப்பதை விட பலமடங்கு சம்பாதிக்க வழிசெய்திருக்கின்றான்
கோழிகுஞ்சாக இருந்த கழுகளான உங்களை உங்கள் பலம் புரியவைத்திருக்கின்றான்
நீங்கள் யானைகள் எங்கிருந்தாலும் வாழமுடியும் என விரட்டியிருக்கின்றான்
இனியாவது அவரை புரிந்துகொள்ளுங்கள்
இன்று உலகெல்லாம் நீங்கள் பெறும் உயர் நிலைக்கு அவரே காரணம்
அந்த நன்றி கொஞ்சமாவது இருந்தால் ஒழுங்காக மெரீனா பக்கம் வந்து வணங்கிவிட்டு செல்லுங்கள்
வரமுடியாதவர்கள் எங்கிருந்தாவது இரு சொட்டு நன்றி கண்ணீராவது விடுங்கள்