ஐஜி விஜயகுமார் காஷ்மீரில் அட்டகாச நகர்வுகள்

Image may contain: 1 person, smiling, hat

ஐஜி விஜயகுமார் காஷ்மீரில் அட்டகாச நகர்வுகளை செய்ய தொடங்கியவுடன் பலர் “தமிழன்டோவ்” “வீரன்டோவ்” என கிளம்பியாயிற்று

உண்மயில் விஜயகுமார் மலையாளி, இடுக்கியில் நாயர் குடும்பத்து பிறப்பு

காஷ்மீரில் அட்டகாசம் செய்யும் தீவிரவாதிகளை ஒடுக்கும் போது தமிழராகிவிட்ட விஜயகுமார், ஒரு வேளை இங்கிருந்து தும்பிகளை பிடித்து அடைத்துகொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்

“ஒரு மலையாளி வீர தமிழனை பிடிக்கும் அளவுக்கு வீரதமிழினம் வீரமிழந்ததா? மானம் இழந்ததா? அய்யகோ..” என பொங்கி கத்தி இருப்பார்கள்

நம்மை பொறுத்தவரை அவர் இந்தியன், பஞ்சாபில் தீவிரவாதத்தை வேரறுத்த கில் வரிசையில் வரும் வீர இந்தியன்

இன்னும் அவர் சாதிக்க நிறைய இருக்கின்றது, சாதிக்கட்டும்