ஐடி கம்பெனிகள் என்ன தமிழக அரசியலா?
ஐடி தொழிலில் பெரும்பாலும் பிராமணர்கள் உயர்பதவி வகிக்கின்றார்களாம், அவர்கள் எப்படி அப்படி உயர்பதவிக்கு செல்கின்றார்கள் என தெரியவில்லையாம்
ஐடியில் ஒரு பெரியார் உருவாகாமல் இதில் முடிவு வராதாம், அந்த பிராமணர்களை அடித்து வீழ்த்தி எல்லோருக்கும் எல்லாமும் கம்பெனியில் கிடைக்க வேண்டுமாம்
இன்னொரு கோஷ்டி வித்தியாசமானது
அதாவது ஐடி தொழிலில் தெலுங்கர்கள் அதிகமாக இருக்கின்றார்களாம், எங்கு பார்த்தாலும் வந்தேறி தெலுங்கர்களாம்
அதாவது அமெரிக்காவிற்கு வந்தேறியாக சென்றிருக்கும் தமிழனே அவனையும் வந்தேறி என சொல்லிகொண்டிருக்கின்றான், இரண்டு பயலும் அமெரிக்காவிற்கு வந்தேறி என டிரம்ப் சொன்னால்தான் இவர்களுக்கு புத்திவரும்
அந்த தெலுங்கர்களின் ஐடி ஆக்கிரமிப்பினை அகற்ற ஒரு சீமான் உருவாக வேண்டுமாம்
ஐடி கம்பெனிகள் என்ன தமிழக அரசியலா? அவை எல்லாம் ஐரோப்பா , அமெரிக்காவினை நம்பி இருப்பவை. புரட்சி வெங்காயம் எல்லாம் அங்கு சாத்தியமில்லை
ஆனாலும் சில கோஷ்டிகள் அங்கு புரட்சி செய்ய போவதாக சொல்லிகொண்டிருக்கின்றது
என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அங்கு மனித உரிமைகளை காக்க கம்யூனிச கொள்கைகள் அவசியம், தொழிலாளர் நலன் சங்கங்கள் அவசியம்
அதனை செய்யாமல் பெரியார் வேண்டும், சீமான் வேண்டும் என்பதெல்லாம் இவர்களை வீட்டுக்குத்தான் அனுப்பும் வேறு ஒன்றும் செய்யாது
பெரியார், அம்பேத்கர் எல்லாம் வெளிநாட்டு தொழில்நிறுவணங்களுக்கு கொஞ்சமும் தேவையில்லா விஷயம், அவர்களுக்கு மார்க்ஸும், லெனினும் தான் அங்குசங்கள்.