ஐதரபாத் சமஸ்தானம்.

ஏன் ஐதரபாத் சமஸ்தானம் பற்றி ஒரு தமிழன் அல்லது திராவிடன் படிக்க வேண்டுமென்றால் அதில்தான் தமிழ்நாட்டு திராவிட கோஷ்டிகளின் பொய்முகம் இருக்கின்றது
தென்னகத்தில் வெள்ளையன் வரும்பொழுது இரு சமஸ்தானங்கள் பலமானது ஒன்று ஐதரபாத் சமஸ்தானம் இன்னொன்று ஆற்காடு சமஸ்தானம்
ஆற்காடு சமஸ்தானதின் வாரிசு போட்டியில் நுழைந்தான் பிரான்சின் டூப்ளே, அவனுக்கு போட்டியாக நுழைந்த கிளைவ் எனும் பிரிட்டானியன் இங்கே பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிகோலினான்
பின் ஆற்காடு நவாப் கூப்பில் உட்கார வைக்கபட்டாலும், ஐதரபாத் சமஸ்தானம் ஆங்கிலேயனுக்கு உட்பட்ட தனி அரசாக இருந்தது
1925ல் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஐதரபாத் நிஜாம், அவருடன் சம்பந்தம் செய்தது துருக்கிய ஆட்டோமான் பேரரசன்
ஆம் அப்படிபட்ட மகா பெரிய இடத்தில் இருந்தது ஐதரபாத் சமஸ்தானம்
இந்நிலையில் 1947ல் சுதந்திரம் வாங்கியவுடன் தன் இஸ்லாமிய பாசத்தின்படி நிஜாம் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டினார், பாகிஸ்தானுடன் நிலவழி சாத்தியமில்லா நிலையில் ஐதரபாத் சமஸ்தானம் தனிநாடாக நிலைக்க ஆசைபட்டார்
இந்தியாவினை எதிர்து போருக்க்கும் துணிந்தார், அவருக்கு ஆயுதம் வழங்க பாகிஸ்தானும் முன்வந்தது. அன்று துருக்கிய அரசு பலமிழந்திருந்தது இல்லையென்றால் சம்பந்தியினை காப்பாற்ற வந்திருப்பார்கள்
பட்டேலோ பெரும் யுத்தத்துக்கு தயாரானார், போலோ விளையாட்டு அரங்கம் நிறைந்த ஐதரபாத் சமஸ்தானத்தை கைபற்ற நடக்கும் போருக்கு “ஆப்பரேஷன் போலோ” என பெயரிட்டது இந்தியா
இங்கு ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்
புவியில அமைப்புபடி டெல்லிக்கும் தமிழகத்துக்கும் இடையில் அரணாக இருந்தது ஐதரபாத் சமஸ்தானம், இன்றைய மராட்டியம், கன்னடம், ஆந்திரா வரை இருந்தது
அது தனி நாடாக நீடித்திருந்தால் தெற்கே திராவிட நாடு அமைய வழி செய்திருக்கும், குறைந்த பட்சம் திராவிட குரல் வரவும் வசதியாய் இருந்திருக்கும்
ஐதரபாத் நிஜாமும் தன் அரசு நிலைக்க திராவிட அரசுக்கு உதவியிருப்பார்
ஆனால் ராம்சாமி கோஷ்டி கனவில் வந்த இல்லாத திராவிட நாடு விந்திய மலைக்கு தெற்கே இருந்து கன்னியாகுமரி கடலுக்குள் பாதிவரை இருந்தது
ஏ நிஜாமே நீ திராவிட நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றாய், ஏ மைசூர் சமஸ்தானமே இது திராவிட பூமி என சொல்ல வேண்டிய கட்டாயத்தில் ராம்சாமி கோஷ்டி இருந்தது
ஆனால் ஆள்வது நவாபும் மைசூர் மன்னனும் எனும் நிலையில் பழியினை பிராமணன் மேல் தூக்கி போட்டு அவர்களை மிதித்து அரசியல் செய்து கொண்டிருந்தது
காரணம் அவர்கள்தான் திருப்பி அடிக்க வலுவற்றவர்கள்
தமிழகத்திலே பசும்பொன் பக்கம் மறவர் நாடு நடத்திகொண்டிருந்தார் பசும்பொன் தேவர், அவரிடம் கூட திராவிட நாட்டை விடு என சொல்ல பயந்த ஈரோட்டு கோஷ்டிதான் மொத்த திராவிடமும் எங்களுக்கு என கனவிலே வாழ்ந்து கொண்டிருந்தது
அந்த 1947ல் திராவிட கோஷ்டி நிஜாமினை ஆதரித்திருக்க வேண்டும், ஆம் அவர் நிலைபெற்றால் மட்டுமே திராவிட நாடு சாத்தியம்
ஆனால் அப்பொழுது நிஜாம் ஆதரவு என்றால் பட்டேல் தொலைத்துவிடுவார், “ஆப்பரேஷன் போலோ” என்பது போல “ஆப்பரேஷன் திராவிடா” என பட்டேல் கிளம்பியிருந்தல ராம்சாமியினை பிடித்து அந்தமான் சிறையில் தள்ளியிருப்பார்கள்
அதே நேரம் பட்டேலுக்கு ஆதரவு என்றால் இந்திய தேசியத்தை ஏற்றதாக பொருள், நவாப் தொலைத்துவிடுவார்
இதனால் ஈரோட்டு கோஷ்டி மகா அமைதி
இன்னொரு விஷயம் நாம் தமிழர் போல இருந்த இந்த கோஷ்டிகளை யாரும் கண்டு கொள்ளவுமில்லை
ஆக திராவிட நாடு அமைய எது வழியோ, எது உண்மையான பலமாக இருந்து திராவிட நாட்டுக்கு வழி விட்டிருக்குமோ அதை ஆதரிக்காமல் விட்டு பட்டேலுக்கும், நவாபுக்கும் அஞ்சி கள்ள மவுனம் காத்து அந்த மகா முக்கியமான நேரம் அதாவது திராவிட நாடு அமையும் நேரம் அதை மறந்து மணியம்மையினை கட்டியது திராவிட புரட்சி
அந்த மணியம்மையினை எதிர்த்து இருவர் தலைதெறிக்க ஓடியதன் பெயர் இனமான விடுதலை
எது திராவிட நாடு? அதை யார் ஆள்கின்றான் ? யாருக்கு நாம் உதவ வேண்டும் அல்லது போராட வேண்டும் என தெரியாத குழப்பம் அரைமயக்கத்திலே ஒருவன் “ஏன் வேண்டும் இன்ப திராவிடம்” என எழுதி கொண்டிருந்தான்
நவாபுக்கு ஆதரவாக அல்லது திராவிட நாட்டை மீட்க வாளேந்தி போராடாமல். யுத்த களத்துக்கே செல்லாமல் எங்கோ மூக்கு பொடி போட்டு கொண்டு, முட்டு சந்தில் “ஏ ஆரிய கைபர் வழி வந்த பார்பானியனே..” என கத்தி கொண்டிருந்தான் அவன் பெயர் “தளபதி”
“அடேய் தளபதி ஐதரபாத் நிஜாமும் கைபர் வழிவந்த ஆப்கானிய வாரிசே வா அவனை விரட்டு..” என்றால் அந்த தளபதிக்கு காதே கேட்கவில்லை
நவாப்புக்கு எதிராக் போர்முரசு கொட்டவேண்டிய தளபதியின் தம்பி “முரசொலி” என தனி அறைக்குள் இருந்து எழுதி கொண்டே இருந்தது
பட்டேலையோ நவாபையோ எதிர்க்க அல்லது ஆதரிக்க வேண்டியவன் திரையில் நம்பியாரோடு போலி வாள்சண்டை இட்டு கொண்டிருந்தான் அவர் “புரட்சி தலைவன்”