ஐபிஎல்: தமிழக வீரர் நடராஜ்..
எத்தனை வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடினாலும் யானை கலை மடக்கி மிதிப்பதை போல, காலை மடக்கி சிக்சர் அடிக்கும் டிவில்லயர்ஸை பார்க்க அழகாகத்தான் இருக்கின்றது, அப்படி மிக துல்லியமாக கணித்து விளாசுகின்றார், மிக சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை
தமிழக வீரர் நட்ராஜின் பந்துவீச்சை பார்ப்பதற்காக காத்திருந்தேன், மிக மிக வறிய குடும்பத்தில் பிறந்து, தெருமுனையில் ஆடி இந்திய கிரிக்கெட்டில் குறிப்பிட்ட இடம் பிடித்தவர் அவர், அவர் மேல் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது
ஆனால் நேற்று அவருக்கு ஒரு ஓவர்தான் வீச கொடுத்தார்கள், அவர் நன்றாகத்தான் வீசினார், ஐபில் போன்ற ஆட்டங்களில் ரன் போகத்தான் செய்யும், அவரும் மிக அதிகம் கொடுக்கவில்லை
பின்னும் ஏன் ஒரு ஓவர் மட்டும் வாய்பளித்தார்கள் என தெரியவில்லை, பெங்களூரு அணி அப்படி ஒன்றும் ரன் குவிக்கவில்லை, கூடுதல் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்
மேக்ஸ்வெல் ஏன் அப்படி செய்தார் என தெரியவில்லை.. அவருக்கு கடும் கண்டனங்கள்..
இன்னும் அவர் வரும் போட்டிகளில் புறக்கணிக்கபடும் பட்சத்தில் “நாமும் தமிழர்” கட்சி சார்பாக ஒரு போராட்டமும், “நாம் கறுப்பர்கள்” அமைப்பின் சார்பாகவும் ஆர்பாட்டம் நடைபெறும்
“நாம் கறுப்பர்கள்” அமைப்பின் கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட கிரிஸ் கெயில் உட்பட பல வீரர்களை அணுகும் திட்டமும் இருக்கின்றது..
எல்லா நாட்டுக்காரனும் வந்து ஆடும் ஐபில் ஆட்டத்தில் ஒரு இந்தியனுக்கு கூடுதல் ஓவர் கொடுத்தால்தான் என்ன? இந்தியன் இங்கு ஆடாமல் ஜெர்மனியிலா சென்று ஆடுவான்??
அணி முதலாளி பிரித்தி ஜிந்தாவினை எப்படி கண்டிப்பது என்பது பற்றி “நாமும் தமிழர்”, “நாம் கறுப்பர்கள்” கூட்டத்தில் முடிவெடுக்கபடும்,
அவரும் இந்த கொடுமையினை தடுக்கவில்லை, இவ்வளவிற்கும் தமிழன் மணிரத்னம் மூலம் திரைக்கு வந்தவர் அவர்..படமெடுக்க தமிழன் வேண்டும், கிரிக்கெட் ஆட வேண்டாமா?
இந்த பிரீத்தி ஜிந்தாவின் கொட்டத்தை அடக்க என்ன செய்யலாம்?
அடுத்த வருடம் ஒரு அணியினை குஷ்பூவினை வாங்க சொல்லலாம்..