ஐரோப்பியாவில் பசு மாட்டு அரசியல்…
பசுமாடு வைத்து இந்தியாவில்தான் அரசியல் செய்வார்கள் என்றால் ஐரோப்பாவிலும் ஆரம்பித்துவிட்டார்கள்
பொதுவாக ஐரோப்பிய நாடுகள் சிறியவை என்பதாலும், பால் அவர்களின் மகா முக்கிய பொருள் என்பதாலும் மாடுகள் வளர்ப்பிலும் அவைகளால் பரவும் நோய்கள் பற்றியும் கவனமாக இருப்பார்கள்
ஒரு மாடு எல்லை தாண்டி செல்லவேண்டுமனால் அதற்கு நோயில்லை என மருத்துவர் கொடுத்த சான்றிதழுடனேத்தான் அந்த மாடும் அதன் உரிமையாளரும் எல்லை தாண்ட முடியும்
இது அவர்களுக்குள்ள விதி
இந்நிலையில் தமிழகத்து வைகோ, சைமன், கமலஹாசன் போல திசை தெரியாமல் சென்ற ஒரு பல்கேரிய பசு செர்பியா நாட்டில் நுழைந்துவிட்டது
உடனே செர்பிய விவசாயிகள் அவர்கள் அரசதுறைக்கு சொல்லிவிட அங்கு வந்த அதிகாரிகள் அதனை பல்கேரியாவிய விவசாயிடமும் ஒப்படைத்துவிட்டனர்
இப்பொழுதுதான் சிக்கல் வருகின்றது
பல்கேரியாவில் கோர்ட் சூட் போட்டு பஞ்சாயத்து கூடி இந்த பசு செர்பியா சென்று வந்திருப்பதால் நோய் வந்திருக்கலாம் கொன்றுவிடுவோம் என முடிவெடித்திருந்திருகின்றார்கள்
ஆனால் அந்த பசு உரிமையாளர் பசுவிற்கு நோயில்லை கொல்ல கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்
பசு கர்ப்பமாக வேறு இருக்கின்றதாம்
இதனால் தனிமைபடுத்தி பாருங்கள் கொல்ல வேண்டாம் என ஐரோப்பா முழுக்க கடும் எதிர்ப்புகள்
ஆனால் பல்கேரிய பஞ்சாயத்து ஆசாமிகளோ இது நாட்டாமையோடா தீர்ப்புடா, கொல்லுவோம்டா என மல்லுகட்டுகின்றார்கள்
விஷயம் பற்றி எரிந்து பிரிட்டன் எல்லாம் களத்தில் குதிக்கின்றது
இந்திய பசுநேசர்களுக்கு இன்னும் விஷயம் தெரியாது போல, தெரிந்துவிட்டால் இந்நேரம் பல்கேரிய தூதரகத்தில் புகுந்து தூதரை பிடித்து இந்திய பசுமாட்டின் காலில் கட்டி இருக்க மாட்டார்களா?
விரைவில் கிளம்புவார்கள்
இதில் அந்த செர்பிய விவசாயிகளைத்தான் சொல்லவேண்டும், வலிய வந்திருக்கின்றது கோமாதா, இது எங்கள் வீட்டு குலமாதா என டகால்டி வேலை செய்து அங்கே வைத்திருக்க வேண்டாமா?
உதாரணத்திற்கு கேரள பசு தமிழகம் வந்தாலோ, தமிழக பசு கேரளம் சென்றாலோ விடுவார்களா?
விடவே மாட்டோம், நம் கலாச்சாரம் அப்படி
“பொய்மையும் வாய்மையிடத்து..” என வள்ளுவன் சொன்னதை செர்பியர் செய்திருந்தால் இச்சிக்கல் வந்திருக்குமா?