ஐஸ்வர்யாய் தெரிந்த அளவு குஷ்புவினை தெரியவில்லை
திரிபுரா மக்களுக்கு கிடைத்திருக்கும் முதல்வர் ஒரு தமாஷ் பேர்வழி, அடிக்கடி சர்ச்சையில் சிக்க ஆரம்பித்துவிட்டார்
அங்கும் எச்.ராசா உருவாகிவிட்டார்.
மஹாபாரத காலத்தில் வைபை இருந்தது என அவர் கொளுத்திபோட்ட சர்ச்சை அடங்குவதற்குள், இப்பொழுது இந்திய உலக அழகிகள் பக்கம் போய்விட்டார்
அதாவது உலக அழகுசாதன சந்தையாளர்கள் இந்தியாவினை குறி வைத்திருப்பது ரகசியமல்ல, சோப்பு முதல் நகப்பூச்சு வரை இந்தியாவில் விற்க ஆரம்பித்தால் அவர்கள் நிறைய சம்பாதிக்கலாம்
இதனால் சுஷ்மிதா சென் முதல் டயானா ஹைடன் வரை நிறைய பேரை உலக அழகிகள் என சொன்னதும்,அவர்கள் மூலமாக ஏராளமான பொருட்களை இங்கு அறிமுகபடுத்தியதும் உண்மை
இதனைத்தான் அன்னார் சொல்ல தெரியாமல் சொல்லி சிக்கிவிட்டார்
உலக அழகுசாதன பொருட்களுக்காக இந்திய பெண்களுக்கு அழகி பட்டம் கொடுக்கபட்டது, ஐஸ்வர்யா ராய் அழகுதான் ஆனால் டயானா ஹைடன் அழகா என கேட்டு தொலைத்துவிட்ட்டார்
யுக்தாமுகி என்பவரை ஏன் விட்டுவிட்டார் என தெரியவில்லை
இப்பொழுது ஐஸ்வர்யா ராயினை அழகி என்றார் திரிபுரா முதல்வர் என சர்ச்சை பறக்கின்றது
நல்ல வேளையாக வடக்கத்தியர் தினதந்தி படிக்கவில்லை என்பதால் அழகிக்கு தினதந்தி கொடுத்திருக்கும் அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை,
அதில் உலக அழகி என்றால் தாங்குமா?
இந்த திரிபுரா முதல்வர் நிச்சயம் பரிதாபத்திற்குரியவர், ஐஸ்வர்யாய் தெரிந்த அளவு குஷ்புவினை தெரியவில்லை இனியாவது படிக்கட்டும்
அதனால் அடுத்த பேட்டியில் “குஷ்பு எனும் மாபெரும் அழகுபெண் இருக்கும் தேசத்தில் ஐஸ்வர்யா ராய் அழகியா?” என அவர் கேட்டே தீருவார் என சங்கம் நம்பிக்கை கொள்கின்றது.