ஐ பி எல் …. ஆர்கே நகர் … கொண்டாட்டம் …
ஐபில் போட்டி கோலகலமாக தொடங்கிவிட்டது
ஆனால் உண்மையான கிரிக்கெட்டை வளர்க்க கபில் தேவ் தொடங்கிய சி.சி.எல் என்ன ஆனது என்றோ, அதனை அழித்து அப்படியே பணமாக மாற்ற எண்ணிய லலித்மோடி என்ன ஆனார் என்பது பற்றியோ யாரும் கேட்க கூடாது
கிரிக்கெட் என்றாலே வரும் சூதாட்டம் பற்றியோ, அதில் டோனி பெயர் வரை அடிபட்டது பற்றியோ யாரும் பேச கூடாது, சீனிவாசன் கூட களத்திற்கு வந்துவிட்டார்
ஆதலால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் , ஆர்.கே நகர் தேர்தல் போல ஐபிஎல்லும் நடக்கும் என நம்பிகொள்வோம்
அந்த லலித்மோடி என்னதான் ஆனார்? அவரின் ஊழல் என்னதான் ஆயிற்று
ஐபிஎல்லில் சிக்ஸர் பறக்கும்பொழுதெல்லாம் பந்தில் அவர் முகமே தோன்றுகின்றது
எத்தனை விக்கெட்டுகள் ஐபிஎல்லில் விழ்ந்தாலும், அவரை மட்டும் வீழ்த்தவே முடியவில்லை….
அனைத்து கட்சிகளும் தோல்வி பயத்தில் பொய் பிரசாரம் செய்கின்றன: டி.டி.வி.தினகரன்
தனியாக இவர் பெயரை சொல்லமுடியுமா? அதனால் மொத்தமாக அனைத்து கட்சிகள் என சொல்லிவிட்டார்
ஆக இவரும் பொய் பிரச்சாரம் செய்கின்றார் என்பதையும், தோல்வி பயம் இருக்கின்றது என்பதையும் மிக பெருந்தன்மையாக ஒப்புகொள்கின்றார்,
இதுதான் காலில் விழுந்து வோட்டு கேட்பது என்பது..