ஒன்றின் தொடக்கம் அல்ல, அதன் போக்கும் முடிவுமே கவனிக்கதக்கது
ஒன்றின் தொடக்கம் அல்ல, அதன் போக்கும் முடிவுமே கவனிக்கதக்கது
அவ்வகையில் பெரும் தோல்வி இந்த அண்ணா என்பவருடையது, நிச்சயம் அது பெரும் தோல்வி
திராவிட நாடு என்பது இன்று சீமான் சொல்லும் இனவிடுதலை போன்றது
இன்று அங்கிள் சைமன் எந்த நிலையில் இருக்கின்றாரோ அன்று அந்த நிலையில்தான் அண்ணா இருந்தார், சீமானின் ஒரே பலம் அவரின் தொண்டை , அண்ணாவின் பலம் ஆங்கிலமும் தமிழும் தேனில் விஷம் தடவும் அந்த தன்மையும்
பெரியாருக்கு ஆங்கிலம் வராது, ஆனால் ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் கட்டுரைகளை படிக்க விரும்பினார், பெரியாரிடம் பணம் இருந்ததால் அதை வாங்கமுடிந்தது ஆனால் படிக்க முடியவில்லை
அண்ணா அங்குதான் புகுந்தார் பொதுவுடைக்கு பதில் திராவிடம், செஞ்சட்டைக்கு பதில் கருப்பு சட்டை, ரஷ்ய கத்தோலிக்க பீடத்த்துக்கு பதில் பிராமணியம்
அப்படியே ரோம் இடத்தில் காஞ்சிமடம் இந்த பீட்டர், மேரி இடங்களில் ராமன் கண்ணன் இந்த காஞ்சி விஷாலாட்சி எல்லாம் வைத்தால் திராவிட சித்தாந்தம் ரெடி
ஒரு நாளும் சொந்த புத்தியோ கோட்பாடோ அவர்களிடம் இல்லை
பெரியார் என்பவரிடம் அடிமையாக இருந்த கோஷ்டி மணியம்மை திருமணத்தை காட்டி ஓடிவந்தது, வந்தாலும் அதை சீண்டுவார் யாருமில்லை
இன்று நாம் தமிழர் தும்பிகள் இருப்பது போலத்தான் அன்று திமுக இருந்தது
அண்ணா அறிவாளி, சிந்தனையாளன் போராளி புண்ணாக்கு என்றால் லெனின், மாவோ, ஹோசிமின், காஸ்ட்ரோ போல மக்களை திரட்டியிருக்கலாம்
ஆனால் ஒரு தமிழனும் அவர்களை கண்டுகொள்ளவில்லை எனும் வலியில் சீனப்போர்தான் சாக்கு என திராவிட கொள்கையினை கைவிட்டனர்
சீமானின் இனவிடுதலை காலாவதியாகி பனங்கொட்டை நடுதலில் வந்து நிற்பது போல அவர்களின் திராவிட நாடு காற்றோடு கலந்தது
சிந்தனைவாதி அறிவாளி என புகழ்பட்ட அண்ணாவுக்கு சினிமாக்காரர்களின் அவதாரமே புகலிடமானது
ஆம் அரிதாரம் பூசிய கூத்தாடிகளிடம் அடைக்கலமானார் அண்ணா
இது உன் தகுதிக்கும் நம் போராட்டத்துக்கும் நல்லதல்ல என எச்சரித்து எனக்கு மானம் உண்டு, அறிவு உண்டு என தனியே சென்றார் சம்பத்
இரண்டும் இல்லா அண்ணா ராமசந்திரனை பகைக்க விரும்பாமல் இதயகனி என சொல்லிகொண்டிருந்தார்
அண்ணாவின் பெரும் பரிதாபம் இது, அவமானம் இது
அந்த ராமசந்திரனை சக நடிகன் சுட்டதை எல்லாம் ஏதோ இந்திக்காரனும் ஆரியனும் சுட்டது போல நாடகம் ஆடி மக்களை மயக்கி வாக்குகளை வாங்கி பதவிக்கும் வந்தார் அண்ணா
தமிழகத்துக்கு சனி பிடித்தது அப்பொழுதுதான்
பாம்பு கடித்தபின் அதை மயக்கும் வித்தை தெரிந்தாலும் பலனில்லை எனும் பழமொழி அண்ணாவிடம் உண்மையாயிற்று
அதன் பின் ராமசந்திரனை அவரால் அடக்க முடியவில்லை, அண்ணாவுக்கு பின் ராம்சந்திரன் பெரும் பிம்பமானார்
ஏன் அண்ணா பெறா வெற்றியினை ராம்சந்தர் பெற்றார் அவருக்கு பின் ஜெயா பெற்றார்
அண்ணாவின் சித்தாந்தம் வென்றிருந்தால் இங்கு கலைஞர் கருணாநிதிதான் அசைக்கமுடியா சக்தியாக இருந்திருக்க வேண்டும்
ஆனால் உண்மையில் இங்கு வென்றது அண்ணாவின் சித்தாந்தம் அல்ல மாறாக அண்ணா உருவாக்கிய சினிமா பூதம்
இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது சினிமா, அதில் இல்லா திராவிடத்தை இருப்பதாக காட்டி ராம்சந்திரனை உருவாக்கி தமிழகத்தை தீரா இருளில் தள்ளினார் அண்ணா
கவனியுங்கள் அண்ணாவுக்கு பின் வந்த முதல்வர் எல்லாம் சினிமா கோஷ்டி, இப்பொழுதுதான் சினிமாக்காரர் அல்லா பழனிச்சாமி வந்திருக்கின்றார்
திமுக நிலை மகா மோசம்
அது ஆட்சிக்கு வர ரஜினி எனும் சினிமாக்காரன் தேவைபட்டான், அதன் பின் விஜய்காந்த் தேவைபட்டான் அவன் வரவில்லை திமுக ஆட்சி பக்கம் வரவே இல்லை
ஆக அண்ணா என்ன உருவாக்கினார் என்றால் ஒன்றுமே இல்லை
லிங்கன், கென்னடி, புஷ் என வந்த அமெரிக்கா இன்று வல்லரசு
சன்யாட்சன், மாவோ, டெங் இன்று ஜின்பிங்க் என வந்த சீனா இன்று வல்லரசு
லெனின், ஸ்டாலின் ,குருச்சேவ், புட்டீன் என ரஷ்யா வல்லரசு
ஆனால் இங்கு என்ன வரிசை தெரியுமா?
அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்
அண்ணா, ராம்சந்தர், ஜெயா, பன்னீர், பழனிச்சாமி
ஆக அண்ணா அந்நாளைய சீமான் என்பதை வரலாறு எக்காலமும் சொல்லிகொண்டே இருக்கும்
அண்ணா ஒரு வெற்று பேனர், ஆனால் சரியாக கட்டிவைத்து பிம்பம் காட்டினார்கள்
ஆனால் காலம் அந்த கயிறை அவிழ்ந்துவிட்டது, அந்த பேனர் சரிந்துகொண்டிருக்கின்றது
ஒரு தீபம் ஓராயிரம் தீபங்களை ஏற்றும்
ஒரு வீரன் பல்லாயிரம் வீரர்களை உருவாக்குவான்,
ஒரு சிந்தனையாளன் நல்ல சிந்தனை தலைமுறையினை உருவாக்குவான்
ஒரு போராளி பெரும் போராளி தலைமுறையினை உருவாக்குவான்
அவ்வை சன்முகம் கூட சிவாஜி, ராதா, கமலஹாசன் என நல்ல நடிப்பு தலைமுறையினை உருவாக்கினார், பால சந்தர் கூட அப்படியே
ஆக திமுக அதிமுக என பெரும் காமெடி கோஷ்டியினை உருவாக்கிய அண்ணா எவ்வளவு பெரும் காமெடியனாக இருந்திருக்க முடியும்?
