ஒன்று உறுதியாக சொல்லலாம்
ஆட்சியிலும் கட்சியிலும் இல்லாத சஞ்சாய்காந்தி ஒரு காலத்தில் ஆடிய ஆட்டம் வரலாற்றில் இருக்கின்றது
தேசியம் என்ற பெயரில் சில நேரம் எல்லை மீறி இந்திரா ஆடிய ஆட்டமும் அங்கேயே கல்வெட்டாக பதிந்திருக்கின்றது
அவர்கள் இருவர் அளவும் இன்னொருவர் ஆடமுடியாது, அட்டகாசம் செய்யவும் முடியாது
அதை எல்லாம் மறைத்துவிட்டு பாஜக பாசிச கட்சி என்பதும், காங்கிரசுக்கு பச்சை கொடி காட்டுவதும் என்ன வகையோ தெரியவில்லை
சஞ்சாய் இந்திரா காலங்களை விட இக்கால பாஜக ஆட்சி ஒன்றும் கொடியது அல்ல
ஆழ யோசிக்கும்பொழுது ஒன்று புரிகின்றது
மோடி என குதிப்பதும், நிர்மலா சீத்தாராமன் செய்யும் நல்ல விஷயங்களை கூட பாராட்ட தயங்குவதும் அவர்கள் மேல் உள்ள எரிச்சலோ அல்லது பயமோ அன்றி வேறல்ல
நிச்சயம் மோடிக்கு இவர்கள் அஞ்சுகின்றார்கள்,மிக கடுமையாக அஞ்சுகின்றார்கள்
அந்த பயமே இவர்களை அலறவைக்கின்றது, அவர்கள் எது செய்தாலும் இவர்களை Gobackmodi
என கதற வைக்கின்றது
ஒன்று உறுதியாக சொல்லலாம்
பாஜகவின் திட்டங்கள் எதுவும் அவர்களின் சொந்த திட்டம் அல்ல
காங்கிரஸ் போட்டுவைத்த திட்டங்களையே இவர்கள் பின்பற்றுகின்றார்கள், கருப்புபண நடவடிக்கை ஒன்றே இவர்களின் திட்டம்
மற்றபடி 99% இவர்கள் செயல்படுத்தியது காங்கிரஸின் வரைவே
அப்படியிருக்க காங்கிரஸ் என்றால் மகிழ்வதும், பாஜக என்றால் எரிந்துவிழுவதும் எங்கணம் சரி?
தீவிரவாதிகள் ராணுவத்தை தொட்டால் ராணுவம் திருப்பி அடிப்பதே சரி , இந்திய ராணுவம் அதை செய்ய அனுமதி கொடுத்தது அரசு
இதில் என்ன மண்ணாங்கட்டி அரசியல் இருக்கின்றது?
இந்திரா நாட்டுக்காக செய்தால் சரி, மோடி செய்தால் தவறு
நிச்சயம் இந்திராவின் எமர்ஜென்ஸி அவரின் பதவிக்கு ஆபத்து வரும்பொழுது அறிவிக்கபட்டது, கலைஞர் சொன்னபடி “ஆபத்து வந்தது நாட்டுக்கா? இந்திராவின் வீட்டுக்கா?”
ஆனால் இப்பொழுது போர்மேகம் சூழ்ந்தாலும் மோடி அந்த அளவு செல்லவில்லை, நினைத்தால் சென்றிருக்க எவ்வளவு நேரமாகும்?
ஆனால் போரை தவிர்த்து எமர்ஜென்ஸியினையும் தவிர்த்திருக்கின்றார்
தமிழக இம்சைகள் மோடிமேல் பயம் என்றால் பயம் என ஒப்புகொள்ளலாம்
மாறாக GobackModi என கத்திகொண்டே இருப்பது அவர்களின் பயம் இன்னும் அதிகபடுகின்றது என்பதையே காட்டுகின்றது
இனி தேசிய கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் உருப்படாது, வேறு தேசிய கட்சிகள் இல்லை
பாஜகவினால் தேசிய உணர்வு வலுபெற்றுவிடுமோ என அஞ்சிய கூட்டமே கருப்புகொடியுடன் அலைமோதி திரிகின்றது
இது மோடி எதிர்ப்பு அல்ல, இந்திய எதிர்ப்பு
உறுதியாக சொல்லலாம் ஒரு நபர் உருப்படியான அரசியலை இப்பொழுது செய்கின்றார் என்றால் தினகரன் ஒருவரே
ஓரளவு வலுவான தலைவராக இருந்தும் எதை செய்ய வேண்டும் எதை செய்யகூடாது என்பது அவருக்கு தெரிந்திருக்கின்றது
யாரை கண்டும் அவருக்கு பயமே இல்லை..