ஒருவர் பாக்கியில்லாமல் பேதமில்லாமல் தமிழிசையினை வாழ்த்திகொண்டிருக்கின்றார்கள்

ஒருவர் பாக்கியில்லாமல் பேதமில்லாமல் தமிழிசையினை வாழ்த்திகொண்டிருக்கின்றார்கள்

முக ஸ்டாலின் வாழ்த்தியிருக்கின்றார், வீரமணி கூட வாழ்த்திவிட்டார் என்பது நல்ல விஷயம்

பெரும் சாதனையினை நிகழ்த்திவிட்ட தமிழிசைக்கு பெரியார் விருது கொடுக்கபடுமா என்பதை மதிமாறன் என்பவர் விளக்க வேண்டும்

எனினும் மொத்த தமிழகமும் பெருமைபடும் படி எல்லோருடைய வாழ்த்துடனும் பதவியேற்க செல்கின்றார் அக்கா தமிழிசை

ஆனால் நாமும் கவனிக்கின்றோம் எல்லா ஆண் தலைவர்களும் வாழ்த்துகின்றார்களே அன்றி ஒரு பெண் தலைவரும் பிரபலஙகளும் வாழ்த்தியதாக தெரியவில்லை

தலைவி குஷ்பு மட்டும் டிவிட்டரில் வாழ்த்தியிருக்கின்றார்

கனிமொழியோ இல்லை வேறு பெண் பிரபலங்களோ தமிழிசை என்றோருவர் இருப்பதாக கண்டுகொள்ளவே இல்லை

பெண்ணுக்கு பெண்களே எதிரி என்பது இதுதான்

அதெல்லாம் இருக்கட்டும், குடும்ப பின்புலமன்றி வசீகரமான தோற்றமும் இன்றி, பெரும்தொண்டர் படையுமின்றி பெரும் போராட்டத்துக்கு பின் அதாவது கிட்டதட்ட 30 வருட போராட்டத்திற்கு பின் அங்கீகாரம் பெற்றிருக்கின்றார் அக்கா

தகப்பன் அண்ணன் இன்னும் உற்றார் யாருமின்றி, ஒரு ஆண்டி பண்டார கட்சியில் சேர்ந்து அவர் போராடி பெற்றிருக்கும் உயரம் பெரிது

இனி தமிழக பெண்களின் தன்னம்பிக்கையின் அடையாளமாக அக்கா உதாரணம் காட்டபடுவார்

எனினும் இந்நேரம் சங்கம் அந்த சிட்டிசன் படத்து அஜித் போல வயிறு எரிந்து சொல்கின்றது

“எலேய் காங்கிரசு.. வயிறு எரியுதுல‌

அந்த குஷ்பு புள்ள இப்படி ஆளுநர் ஆயிருக்க வேண்டிய புள்ளலே.. அதோட அரசியல் வாழ்க்கைய கெடுத்துபுட்டியலே

இந்த சாபம் சும்மா விடாதுலே, ஒழுங்கா அந்த பச்சை மண்ண காங்கிரஸ் தலைவராக்கிருங்கல‌

இல்லண்ணா காங்கிரஸ் தனுஷ்கோடி மாதிரி மண்ணா போயிரும்ல, வயிறு எரிஞ்சு சொல்றோம்லே… சங்கத்து சாபம் உங்கள சும்மா விடாதுல”

நிச்சயம் தமிழிசையின் இடம் தலைவி குஷ்புவின் இடம், அன்றே பாஜகவில் சேர்ந்தால் அவர் இந்நேரம் பெரும் உயரம் தொட்டிருப்பார்

கலைஞர் பேச்சை கேட்டு நாசமாக போய்விட்டார்

கலைஞர் பேச்சை கேட்ட முக முத்து உருப்படவில்லை, அழகிரியினை காணவில்லை, ஸ்டாலின் திகைகின்றார், தயாளு அம்மாள் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி தப்பினார்

ஆக கலைஞர் பேச்சை கேட்ட யாருமே உருப்பவிடவில்லை, குஷ்புவும் அந்த சாபத்தில் சிக்கிவிட்டார்

ஆயினும் தலைவியினை சும்மா விடமுடியுமா?

கலங்காதே ராசாத்தி காலம் இருக்கு, உங்களையும் மகராஷ்டிர கவர்ணராக ஒரு காலத்தில் காலம் அமர்த்தும்

அதற்கு இந்த காங்கிரஸ் மற்றும் திமுக பேச்சை கேட்காதீர்கள், அதை தூக்கி எறியுங்கள்

அப்படி அந்த இம்சைகளை தூர எறிந்தால் கவர்ணர் பதவி என்ன குடியரசு தலைவர் பதவியே உங்கள் காலடிக்கு வரும்

(பாருங்கள். தலைவி காதில் தாமரை மலர்ந்திருக்கின்றது ஆனால் தலைகீழாக மலர்ந்துவிட்டது அவ்வளவுதான்)