ஒருவேளை காஷ்மீருக்கான 370ம் சட்டபிரிவு நீக்கபட்டால் என்னாகும்?
ஒருவேளை காஷ்மீருக்கான 370ம் சட்டபிரிவு நீக்கபட்டால் என்னாகும்?
ஒன்றும் ஆகாது, இது இந்தியாவின் உள்நாட்டு சிக்கல் என உலகம் சொல்லிவிடும். மிஞ்சி போனால் கொஞ்சம் கண்டிப்பு , சில அரசியல் குத்தல்கள், சில திறைமறைவு பேச்சுக்கள் என்பதை தாண்டி ஒன்றும் நடக்காது
எல்லா நாடும் ஒவ்வொரு பகுதியில் இப்படி அழிச்சாட்டியம் செய்வதால் யாரும் கேள்வி கேட்கவும் முடியாது
திபெத்தில் சீனா, சர்ச்சையான இலங்கை, இஸ்ரேல், உக்ரைனில் ரஷ்யா, ஆசாத் காஷ்மீரில் பாகிஸ்தான், இன்னும் பல தீவுகளில் ரஷ்யா, இன்னும் சில இடங்களில் பிரான்ஸ் பிரிட்டன் என சிக்கிகிடக்கும் உலகிது
ஒருவேளை காஷ்மீரின் சலுகை ரத்து செய்யபட்டாலும் எல்லோரும் ஒருவர் முகத்தை பார்த்து கொண்டு ஜனகராஜ் ஸ்டைலில் சிரித்துகொண்டு நகர்வார்கள்..
மன்னர் கால ஒப்பந்தம், அது முறிந்தால் காஷ்மீரிய நிலை என சில விஷயம் இருந்தாலும் அவை சபையேற போவதில்லை
இது பனிப்போர் காலமென்றால் நிச்சயம் சிக்கல், மகாசிக்கல் காஷ்மீரிய குங்குமபூவுக்கும் ஓக் மரங்களுக்கும் சிக்கல் என வல்லரசுகள் வந்து அமர்ந்துகொள்ளும்
இப்பொழுது நிலை அப்படி அல்ல
இதனால் 370 என்பதை நீக்கினாலும் கொந்தளிப்பு உலகம் முழுக்க பரவாது, அதை யாரும் பொருட்படுத்த போவதுமில்லை
மத்திய அரசு ஒரு முடிவோடு பரபரப்பு செய்திகளை மீடியாக்கள் மூலம் பரப்பிவிட்டு நாடிதுடிப்பினை பார்த்து கொண்டிருக்கின்றது
எல்லாமே மத்திய அரசுக்கு சாதகமாக செல்வதால் ஒரு நள்ளிரவு அல்லது அதிகாலையில் பிரதமர் மோடி அதிரடி அறிவிப்புகளை செய்யலாம்
அவர் ஏதும் சொல்லிவிட்டால் என்னாகும்?
இங்கு பழனிலார்டு கோஷ்டிக்கு இருக்கின்றதே இருக்கின்றது ராமசந்திரன் பாடல், அது போதாதா?
“புதிய வானம், புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகின்றது
மோடி வருகையிலே அவரை வரவேற்க” என கிளம்பிவிடுவார்கள்
“ல்லால்ல ல்லா லா…” பாட தமிழிசை அக்காவும் ரெடி