ஒரு அமைச்சர் குறிப்பிட்ட சாதியினை மிக இழித்தும் பழித்தும் பேசுகின்றார்
பெரியார் மண் என்கின்றார்கள், பெரியார் பூமி என்கின்றார்கள்
ஆனால் ஒரு அமைச்சர் , குறிப்பிட்ட சாதியினை மிக இழித்தும் பழித்தும் பேசுகின்றார்
அவர்மேல் சாதிய வன்கொடுமை சட்டம் பாயவுமில்லை, இங்கு சலசலப்புமில்லை
இந்த திமுக , சாதிய வன்கொடுமை சட்ட தளர்வில் கண்டனம் வேறு தெரிவிக்கின்றதாம்
எதற்கு சிவி சன்முகம் மேல் வழக்கு தொடர்ந்தால் அவர் தப்புவதற்கா?
இங்கே அமைச்சரே சாதி ரீதியாக திட்டமுடிகின்றது என்றால் இது என்ன பெரியார் பூமி, என்ன கருப்புசட்டை காடு?
சாதிய வன்கொடுமை சட்டத்தை இங்கு பயன்படுத்த தயங்கும் திமுக இனி அச்சட்டத்தை பற்றி பேச என்ன உரிமை இருக்கின்றது?
சி.வி சன்முகத்தின் பேச்சு எச்.ராசா , எஸ்.வீ சேகர் பேச்சை விட பன்மடங்கு மோசமானது
ஆனால் திமுகவிலிருந்து ஒரு குரலும் இல்லை
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல தமிழக பாஜக ஆகிவிட்டது
எச்.ராசா என்றால் பொங்குபவர்கள் அமைச்சர் என்றால் அப்படியே நவதுவாரத்தையும் பொத்துகின்றார்கள்
ஆனானபட்ட நேரு நான்சென்ஸ் என்றபொழுது உனக்கு நோசென்ஸ் என கொடிபிடித்து கிளம்பிய திமுக இப்பொழுது இல்லை
ராமசந்திரனையும், ஜெயலலிதாவினையும் தீரமாக எதிர்த்து இறுதியில் ஜெயா குற்றவாளி என தீர்ப்புவாங்க வைத்த திமுகவின் நுட்பமும் தைரியமும் இப்பொழுது இல்லை
சதாம் உசேன் இல்லா ஈராக்கை ஆளாளுக்கு அடிப்பது போல,கலைஞர் இல்லா திமுகவினை சிலர் கிள்ளி பார்க்கின்றார்கள், சிலர் அடித்து பார்க்கின்றார்கள்
இப்போதைக்கு தமிழகத்தில் தன்மானமுள்ள கட்சி பாமக ஒன்றுதான்
இதே சிவி சன்முகம் பாமாகவினை இப்படி பேசியிருந்தால் நடந்திருப்பதே வேறு, அதற்கு தன்மானமும் சுயமரியாதையும் இருக்கின்றது
திமுகவிற்கு என்ன இருக்கின்றது அல்லது இல்லை என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்
இந்த சன்முகத்தை விட்டுவிட்டு இனி எச்.ராசாவினையோ அல்லது வேறுயாரையாவது திமுக கண்டித்தால் உலகத்தார் வாய்விட்டு சிரிப்பார்கள்