ஒரு கட்சி விழா என்றால் சில அரசியல்வாதிகள் வரத்தான் செய்வார்கள்….

இதென்ன பிரமாதம், ஒரு கட்சி விழா என்றால் சில அரசியல்வாதிகள் வரத்தான் செய்வார்கள், ஸ்டாலினை சந்திக்க பல பெரும் தலைவர்கள் வந்ததில் என்ன ஆச்சரியம்? என சிலர் சொல்லி தமக்கு தாமே ஆறுதல் சொல்கின்றார்கள்

இதெல்லாம் ஆற்றமையிலும் ஒரு வித தாங்கமுடியா வலியாலும் சொல்லிகொள்ளும் விஷயங்கள்

இப்படி சொல்பவர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்,

எங்கே, சசிகலாவும், தினகரனும் இப்படி ஒரு பல தலைவர்களை அழைத்து ஒரு பெரும் கூட்டம் நடத்திவிடட்டும் பார்க்கலாம், இவ்வளவிற்கும் அவர்கள் பொன்முகம் ராமசந்திரனின் நூற்றாண்டு விழாதான்

எல்லா தலைவர்களையும் அழைத்து விழா நடத்த முடியுமா? வருவார்களா? அப்படி வந்தால் இந்தியா முழுக்க கார துப்ப மாட்டார்களா?

இவர்கள் அழைத்தால் என்னாகும்? மோடி போலவே எல்லா தலைவர்களும் வெளிநாட்டுக்கு அலறி அடித்து ஓடிவிட மாட்டார்களா?

கூட்டத்திற்கு தலைவரை அழைத்துவர லஞ்சம் கொடுக்க முயன்றார்கள் அதிமுகவினர் என்ற செய்தியினை எந்த அகில இந்திய தலைவர் தாங்குவார்?

கலைஞர் என்ற ஒற்றை சொல்லுக்காக இந்தியா திரண்டு வந்திருப்பதுதான் நிஜம், இனி வேறுயாருக்கும் தமிழகத்தில் அப்படி வாய்ப்பே இல்லை, இது தெரிந்தும் அழுதுகொண்டே இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது..


நாடு முழுவதும் பாவிகள் தான் இருக்கக்கூடாது – காவிகள் இருக்கலாம்: தமிழிசை

காவிகள் இருப்பதா பிரச்சினை மேடம்?, காவிகளுக்குள்ளும் பாவிகள் இருப்பதல்லா பிரச்சினை, அதனை பற்றி எல்லாம் அம்மணி பேசமாட்டார்..