ஒரு காலமும் இப்படி இல்லையே?

ரஜினி படத்தை பார்த்துவிட்டு அவரின் ரசிகர்கள் எல்லாம் ஏன் இதயம், குடல் மற்றும் இதர பாகங்கள் தெறிக்க கத்துகின்றார்கள் என்பது புரியாமலே இருந்தது

ஒரு காலமும் இப்படி இல்லையே? இதென்ன புதுவகையான ஆக்ரோஷம் என அச்சபட்டு கேட்டால் ஒரு பயலும் சொல்லவில்லை

மிக முக்கியமான ஒருவனை பிடித்து உண்மையினை சொல் உனக்கு ரஜினிகாந்தோடு இமயமலையில் சந்திக்க ஏற்பாடு செய்கின்றேன் என ஆசைகாட்டியதும் உண்மையினை சொல்லிவிட்டான்

விஷயம் வேறொன்றுமில்லை

சீமானையும் நாம் தமிழர் தும்பிகளையும் அவர்கள் பாணியில் கலாய்க்கின்றார்களாம்

அவர்களை போல .. தெறிக்க கை கால் கண்களை எல்லாம் உருட்டி மகா உணர்ச்சி கொந்தளிப்பில் பதில் சொல்கின்றார்களாம்

அவர்கள் அப்படி சொன்னபின்பு ரஜினி ரசிகர்களின் ஆக்ரோஷ தர்பார் ரியாசனை பார்த்தபின்பு பலமடங்கு சிரிக்க முடிகின்றது

நீங்களும் இனி அந்த வீடியோக்களை பாருங்கள் விடாமல் சிரிப்பீர்கள்…