ஒரு குறள் .. தமிழிசை… கொட நாடு ….

குறள்:
“வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

பொருள்:
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

இப்படி சொல்லி ஜிஎஸ்டியினை பலர் கலாய்த்துகொண்டிருக்கின்றனர், பதிலுக்கு இப்படி சொல்ல ஒரு பாஜக காரனையும் காணவில்லை

அவர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தை யோகா பாணியில் தலைகீழாக நின்று படிப்பார்கள் போலிருக்கின்றது

குறள்:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

பொருள்:
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

வள்ளுவன் தான் எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருக்கின்றானே? படித்து சொன்னால் என்ன?


Image may contain: 1 person, smiling, flower and plant“ஜிஎஸ்டியால்தாய்மார்களின் உள்ளம் குளிர்ந்திருக்கின்றது, கண்ட கண்ட உணவகங்களில் சாப்பிட்டு உடம்பினை கெடுத்தவர்கள் எல்லாம் ஜிஎஸ்டிக்கு பயந்து ஒழுங்காக தாய், மனைவி சமையலுக்கு ஓடி வருகின்றார்கள்

எல்லா தாய்குலங்களும் இதனால் மோடியினை வாழ்த்துகின்றன,

இதுபோல பெண்கள் மனதை குளிரவைக்கும் ஏராளமான திட்டங்கள் எங்களிடம் உண்டு, ஆதரிப்பீர் எங்களை..”

அப்படித்தான் விரைவில் சொல்ல போகின்றார் நமது தமிழிசை…

 

கொடநாடு விவகாரம் திகில் படம் போல் போய்க்கொண்டிருக்கிறது : சீமான்

ஈழத்திற்கு வியப்பும் திகைப்பும் நிறைந்த பயணம் சென்றது போல, கொடநாட்டுக்கு ஏன் நீங்கள் பயணம் செல்ல கூடாது?

கொழும்பில் சிங்களன் கண்ணில் மண்ணை தூவி, ஆயிரம் சிங்களர் சுட்டுகொண்டிருக்க, விமானம் குண்டுமழை பொழிய அதிலே சாகசமாக தப்பி சென்று பிரபாகரனை கண்ட உங்களுக்கு இந்த கொடநாடா பெரிய விஷயம்?

ம்ம் கிளம்புங்கள்