ஒரு தமிழன் சாதித்திருக்கின்றான், அவனை வாழ்த்தும் மேடையில் சண்டை

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வேலூர் வீரருக்கு பாராட்டுவிழா நடந்திருக்கின்றது, நடத்தியது அரசு என்பதால் அதிமுகவினர் குவிந்திருக்கின்றார்கள்

விஷயம் அறிந்த அந்த தொகுதி எம்.எல்.ஏ குதித்திருகின்றார், நான் இத்தொகுதி எம்.எல்.ஏ என்னை ஏன் அழைக்கவில்லை என கொதித்ததில் சண்டையாயிற்று

ஆம் எம்.எல்.ஏ திமுக கட்சி, போதாதா?

இனி இந்த தாசில்தார், ஆர்.ஐ. ஆர்டிஓ , பஞ்சாயத்து தலைவர் எல்லாம் எப்பொழுது குதிப்பார்களோ தெரியாது

ஒரு தமிழன் சாதித்திருக்கின்றான், அவனை வாழ்த்தும் மேடையில் சண்டை

இதில் கூட ஒற்றுமையுமில்லை, பெருந்தன்மையுமில்லை.

ஒரு வாழ்த்து விஷயத்திலே இவ்வளவு அரசியல் அதாவது நானே வாழ்த்துவேன் என அடம்பிடித்தால் இவர்களை என்ன செய்வது

பின் காவேரி எப்படி வரும்?